Wednesday 2 September 2015

அத்திம்பேரின் ஹாஸ்யம்.

                                              4. அத்திம்பேரின் ஹாஸ்யம்

அக்கா தன் பெண்களுக்கு பண்ணும் கல்யாணம் சம்பந்திப்பேரால் புகழ்பாடியபடி இருக்கும்.
அக்கா வைத்த கட்டுச்சாதக்கூடையைப்பற்றி இன்று வரை கூறிக்கொண்டிருக்கிறார் ஒரு மாப்பிள்ளை.

           காலை வேளையில் காபிக்குப்பதில் கஞ்சி சாப்பிட்டால்  நல்லது என காப்பிக்கி பதில் கஞ்சி ஆரம்பமாயிற்று.சென்ற்வாரம்தான் மாதச்செலவில்  சர்க்கரை ஜாஸ்த்தியாகியுள்ளது எனவும்சர்க்கரையை
குறைக்க வேண்டும் எனவும் பட்ஜட்டில் ஏக மனதாய் தீர்மானம் செய்யப்பட்டது.அத்திம்பேர்
அதனால் கஞ்சிக்கு கொஞ்சம் சர்க்கரை குறைவாய் போட , குழந்தைகள் குடிக்காமல் strik
பண்ண, பின் அத்திம்பேர்  ஒன்றரைப்பங்கு சர்க்கரை போட ஆக அத்திம்பேர் சிக்கனம்
அந்தரத்தில்


அத்திம்பேரின் நல்ல மனசு யாருக்கும் வராது . யார்வந்தாலும் ஊருக்குப்போக விடமாட்டார்.
வந்தவர்கள் அவரிடம் சொல்லிக்கொண்டு போன வழக்கமே இல்லை.
இவ்வளவு நல்ல அத்திம்பேர் தன் மாமியார்வீடு வந்தால் மட்டும் மாப்பிள்ளை முறுக்குப்பண்ணிப்பார்
காபி குடியுங்கள் என இரண்டுதரம் தரம் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பார்.
இத்தனைக்கும் அவர்மாமியார் அவருக்கு சொந்த அத்தை !!!