Sunday 22 November 2015

3. சிறு பிராயமுதல் வாழ்வின் விளிம்புவரை. பக்கம் 3

 பின் நாலு குழந்தைகளுக்கு பின் அழகான் பெண் உஷா பிறந்தாள். என் மாமனார் அடிக்கடிசொல்வார்," நான் சென்ற பின்தான் கிருஷ்ணமூர்த்திக்கு நல்ல காலம் பிறக்கும் என"அவர்ஆசியும், பெண் பிறந்த வேளையும்,இவருக்கு PhD பண்ண ஒரு scolership கிடைத்தது.
அதற்கு போகவேண்டுமானால் தற்பொழுது வேலையில் இருக்கும் காலேஜில் லீவு கொடுக்கவேண்டும்,தவிர இப்பொழுது வாங்கும் சம்பளம் போதாமல்  tuition சொல்லிக்கொடுத்து, அந்தவருவாயில் குடும்பம் ஓடிக்கொண்டிருக்கிறது.இங்குள்ள ₹ 400. 00 வருமானமே கஷ்டநிலை.
அங்கு Scolership ₹ 200.00 தான். அதில் குடித்தனம் பண்ண முடியுமா? புதிய. ஊர் , விலைவாசி எப்படியோ? இங்கு தெரிந்த நண்பர்களிடம் கைமாத்து வாங்கலாம். அங்கு யாரையும் தெரியாது.எல்லாவற்றையும், என் அப்பாவிடமும், இவரின் நண்பர் ஒப்பிலியிடமும், கலந்து ஆலோசிப்போம்.
நாள் நகருமே தவிர,ஒரு முடிவுக்கும் அவர் முடியாது. ஒப்பிலி, "சார் நான் உங்களிடத்தில் இருந்தால் நான் போகமாட்டேன் எனக்கு தைர்யம் இல்லை "என்பார்.என் அப்பாவோ பணத்தால் என்னால் செய்ய முடியும் என்று தோன்றவில்லை , தேகத்தால் எது வேண்டுமானாலும்செய்கிறேன்" என்றார். என் அப்பா என்ன செய்வார் 9 குழந்தைகளை கடன் இல்லாமல்கரையேத்தியவர். நாட்கள் நகர்ந்து,முடிவு எடுக்கமுடியாமல் தவித்தோம்.கடைசியில்
வந்த வாய்ப்பை தவற விட்டு, பின் வாழ்நாள் பூராவும் வருத்தப்படுவதை விட, வந்தது வரட்டும்வருவதை எதிர்கொள்வதுஎன முடிவெடுத்தேன்  நான் தைர்யம் கொடுத்ததும்,  VKயும் எதிர்த்துப்போராடுவோம் என கை கொடுத்தார்.

 மதுரையில் இருந்து சிதம்பரம் சென்றோம் நாலுகுழந்தைகளுடன். இவரின் நண்பர்
திரு. கணேசன், நாங்கள் வரும்பொழுது, அவர்கள் வீட்டில் தங்கி பின் எங்கள் வாடகைவீட்டை
சுத்தம் செய்தபின் நாங்கள் குடி போகலாம் என்று சொல்லியிருந்தார். அதனால் அவர் வீட்டுக்கு
குதிரைவண்டியில் சென்றோம். அவர் வீட்டை நெருங்கும்போதுதான் தெரிந்தது , முதல் நாள் அவர்
தாயார் தவறிய செய்தி. பின்நாங்கள் பார்த்த வாடகை வீட்டிற்கு சென்று, வீட்டைச்சுத்தம் செய்து, பின் ஹோட்டலில் இருந்து சாப்பாடு வரவழைத்துச்சாப்பிட்டோம். அதுவரை குடுமிவைத்துக்கொண்டிருந்தவர், புது இடம் வந்ததும் கிராப் செய்துகொண்டார். என் சந்தோஷத்துக்கு அளவேயில்லை. பல நாள் நான் ஆசைப்பட்டது, நிறைவேறியது. அந்த சந்தோஷம் மறு நாளே காணாமல் போனது. மறு நாள் காலேஜ் சென்று கையெழுத்துப்போட்டு , Join பண்ணினார். முதல் நாள் சென்று வந்தவருக்கு,மறு நாளே நல்ல ஜுரம். நாலு நாள் ஜுரத்துக்குப்பின், நீர்குளுவான் அம்மை கண்டது.ரொம்ப கடுமையாய் இருந்தது. புது இடம் வேற அம்மை கண்டதால் ஆஸ்ப்பத்திரிசெல்லக்கூடாது என்ற காலம் அது.  என் வயது 25 , அநுபவமில்லாத வயது. இப்படிக்குழம்பித்தவித்தபோது, மற்ற மூன்று குழந்தைகளுக்கும் அம்மை கண்டுவிட்டது.அப்பொழுது என் குடும்பம், நடுக்கடலில் தத்தளித்த படகு மாதிரி இருந்தது. ஒரு ஆறுதல்என் அப்பா என் கூட இருந்தார். அப்பொழுது அவர் வயது 75. ஒரு மாதம் குடும்பம் த த்தளித்தாலும்ஆண்டவன் உயிர்ச்சேதமில்லாமல் எங்களை கறைஏத்தினார். அவருக்கு அனந்த கோடி நமஸ்க்காரம்
               அந்த வீடு  பெரிய ரோடில், போக்குவரத்துச்சத்ததுடன் வசதியல்லாமல் இருந்தது.வாடகையும் ₹45-0-0 , பின் இவவரின் நண்பரின் மூலம், வாடகை ₹25-0-0 ஒரு வீடு கண்டுபிடித்து,குடிபோனோம். அங்குதான் டிகிரி முடிக்கும்வரை இருந்தோம். டிகிரி முடித்த,கதையைVK யின் blog ல் கண்டறியலாம்.  பின் மதுரைக்கு வந்தோம் இங்கு வந்து, பத்து மாத்ததுக்கெல்லாம், இவருக்கு Urbanaஎன்னும் univercityல் வேலை கிடைத்தது. திரும்பவும் எங்களுக்குக்குழப்பம். இப்பொழுதுசெல்வதா? வேண்டாமா?  வேண்டாம் என்றால் ஏன் அதற்கு முயற்ச்சி செய்தோம்?
ஆக போகவேண்டும், போனால் Experience  + பணம் கொஞ்சம் கையில் கிடைக்கும்,
இப்பொழுது குடும்பம் எங்கு இருக்கும் ? எங்களுக்குத்துணை யார்? என்னால் குடும்பபாரம்,,
முழுவதும் ஏற்று நடத்த முடியுமா? திரும்ப என் அப்பா, அண்ணாக்களுடன் ஆலோஜனைக்குப்பின்
நான் தனியாக குழந்தைகளுடன் மதுரையிலேயே இருப்பது, என் அப்பா துணைக்கு இருப்பார் என்றும்,என் மன்னியும் அவள் பெண்ணும் எங்கள் கூட இருந்தால் சற்று உதவியால் இரக்குமெனவும், தீர்மானம் செய்து விட்டு VK.   பின் US சென்றார். அவர் சென்றது Full bright
Scolership ல் . ஒரு மாதம் கப்பலில் செல்லவேண்டும். வேலையையும், விட்டாய்விட்டது,
புது வேலையிலும் சேரவில்லை. ஒரு இடத்திலும் சம்பளம் கிடையாது. கடன் வாங்கி குடும்பத்தை
நடத்த ஏற்பாடு செய்து விட்டு கப்பலில் சென்றார்.


தொடரும்்

Thursday 19 November 2015

2. சிறு பிராயம் முதல் வாழ்க்கையின் விளிம்பவரை பக்கம் 2

நான் அப்பொழுது நிறைமாத கர்ப்பிணி,  என் கணவருக்கு காலேஜில் வேலை இருந்ததாலும், ஒரு இங்கிலீஷ் playல் lady carectorல் நடிப்பதாலும், என்னை,என் மாமனார் chekupக்கு அழைத்துச்சென்றார்.என்னை பரிசோதித்த டாக்டர், என்னை உடனே admit பண்ண வேண்டும் என்று சொன்னதால் , என்னை admit பண்ணி விட்டு என்மாமனார் வீடு சென்றார்.அந்தக்காலத்தில் phone வசதியோ, காலேஜில் contact பண்ணுவதோ முடியாத, தெரியாத, காலம்.நான் தனியாய் பிரஸவவலியில்  இருக்கும்பொழுது, என் கணவர் Playல் கை தட்டலுடன் நடித்துக்கொண்டிருந்தார்.இதில் யாரையும் குத்தம்சொல்லவொ,குறை கூறவோமுடியாது. அந்தக்காலத்தில் அப்படித்தான் நடக்க முடிந்தது. பின் 1951 ல் ரவி பிறந்தான். என் நாத்தனார் குடும்பமும்எங்களுடன் இருந்தது . டவுன் வாசம், இடம் பற்றாக்குறை, எல்லாவற்றையும் நினைத்து  அவர்களை ஒரு  கிராமத்தில் வைத்தோம். எல்லாம் என் கணவர்தான்செய்யவேண்டியிருந்தது. என்  மைத்துனர் வடக்கே இருந்ததால் அவரால் உதவ முடியவில்லை. என் நாத்தனார் பெண்களை , பெண்பார்க்கும் படலமா நாங்கள் இருவர்தான். கல்யாண ஏற்பாடா  நாங்கள் இருவர்தான்.,ஒரு பையில் துணி மணிஎடுத்துக்கொண்டு,புறப் பட்டு விடுவோம். பையிலும் கனம் கிடையாது, ஏன் பர்ஸிலும் கனம் கிடையாது!!  ஆக ஒவ்வொரு பெண் கல்யாணமாய் நடத்தினோம்.. அந்த சமயத்துக்குத்தான் என் மைத்துனரால் வர முடிந்தது. அவரின் சூழ்நிலை அப்படி.        

 பின் என் கணவர் IAS exam எழுத சென்னை சென்றார்அப்பொழுது என் மாமனாரும்  நானும் இருந்தோம். அப்பொழுது என் கணவரின் சினேகிதர் ஒப்பிலி என்பவர் ( என்கணவரும் அவரும் ஒரே காலேஜில் வேலை பார்ப்பவர்கள்) . அவர் தனக்கு கல்யாணம் ஆகி புதுக்குடித்தனம் செய்ய
வீடு பார்த்திருப்பதாயும்,  அது தனி flat and modern ஆக இருப்பதாலும், மோட்டார் மூலம் பைப்பில் ஜலம் வரும் என்றும், என் மாமனாரிடம் சொல்ல, என் மாமனார் என் இஷ்டம் என்ன என்று கேட்க, நான் VK யிடம்  கேட்காமல் எப்படி என யோஜிக்க, நீ தான் கிரஹலக்ஷ்மி அவன் என்ன சொல்லப்போகிறான் என்று என்மா மனார்சொல்ல ஆக எட்டு மாத கர்பிணியான , நானும்
 70 வது வயது கிழவரான என் மாமனாரும் வீடு மாற்றினோம்.

        ஆஹா சிமண்ட் தரையென்ன, மோட்டார்மூலம் பைப்பில் தண்ணீர் என்ன,நல்ல காற்று வேறு என ஆனந்தப்பட்டோம். ஒரு மாதத்தில் மோட்டார் காலை வாரி விட, வீட்டுக்காரன் ரிப்பேர் உங்கள் செலவு எனச்சொல்ல, எங்கள் ஒருவரிடமும் அதற்கு வேண்டிய பணவசதி இல்லாத காரணத்தால் கிணறுதான் கை கொடுத்தது.  தண்ணீருக்கு! இரவு கொசுக்கடி, அதறகுத்துணையாய் மூட்டைப்பூச்சி வேறு! இவைகளை மறக்க வாசலில் புஷ்பம் போடவும், காய்கறி போடவும் இடம் இருந்தது. அதில்ஆனந்தப்பட்டோம்.  அப்பொழுது என் நாத்தனார் லக்ஷமியின் கணவர் மிக உடல் நலம் சரியில்லாமல் (plurisy) இருந்ததால் என் மாமனார் தன் பெண் குடும்பத்தை எங்களிடம் அழைத்து    வந்தார். வருவாய் வாய்க்கும், கைக்கும் போதாத வருமானம். இப்பொழுது இரண்டு  குடும்பம்(10பேர்கள்) ரேஷன் காலம் அரிசி கிடைக்காது. ரேஷனில் கொடுக்கும் கோதுமையை வைத்து சமாளிக்க வேண்டும். என் மாமியாரின் தங்கை தன் அக்கா பெண்ணுக்கு ஆறுதல் கூற எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். என் நாத்தனாருக்கும், தன் கணவன் உடல்நிலையை கூறி  ,ஆறுதல் பெற ஒருவர் வேண்டும். ஞாயமான கோரிக்கைதான். ஆனால் என் பாடு "இருதலைக்கொள்ளி எறும்பு" நான் எட்டு மாத கர்ப்பிணி, வறுமையின் வளர்ச்சியில் குடித்தனம்,  வேளைக்கு ஏதாவது சமைத்துப்போட வேண்டும்,( அது என் கடமை) செய்யவும் உடல் இடம்கொடுக்காமல், செய்யாமலும் இருக்க முடியாமல் பூலோக நரகமாய்  அனுபவித்த காலம்அது. கொஞ்ச நாளில் என் நாத்தனார் கணவர் காலமானதும் அந்தக் குடும்பத்தையும் காப்பாத்த வேண்டிய கடமையும் சுமையும் என்  மாமனார் தலையில் விழுந்தது.

இப்படி பல மாதங்கள் உருண்டோட குடும்பநிலை ஒரு  நிலைக்கு வர கடவுள் இவர்க்ளை இப்படி விடக்கூடாது என்று எண்ணினாரோ என்னமோ. மூத்தவன் ரவிக்கு (இரண்டு வயது )கடுமையான காய்ச்சல் வர, திரும்ப டாக்டரிடம் ஓட அவனுக்கு poison typphoid  என்று கண்டுபிடித்துச்சொல்ல, யாரும் பக்கத்தில் செல்லாமல் தனிமைப்படுத்தவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டோம்.  பத்து  நாட்கள் பட்ட அவஸ்தைக்குப்பின் ஜுரம் இறங்காமல் டாக்டர் கையைவிரித்து  உறவினர்களுக்குத்த்தெரியப்படுத்தலாம் என்றும் சொல்ல இவர் என் பிறந்தகத்து மனிதர்களுக்கு தகவல் எழுத அவர்களும் வந்து பார்த்தார்கள்.

VK  இனி பகவான் தான் துணை  என்று வால்மீகி ராமாயணத்தில் ஒரு குறிப்பிட்ட ( அவர் தந்தை குறித்துவைத்திருந்த படி) ஒரு சர்க்கத்தை 48 நாள்  பாராயணம் பூஜை முதலியவை செய்து, 48 நாளும் அகண்டதீபம் எரியும்படியும் செய்தோம். (இரவு பகல் தீபத்துக்கு எண்ணை விட்டு அதை காப்பாற்றினோம்). எங்களால் ஆனதைச்செய்தோம். அக்கம்பக்கம் உள்ளவர்களில் சிலர் இதைப்பார்த்து பரிதாபப்பட்டும் சிலர் பரிகாசமாகச்சிரிப்பவர்களுமாக இருந்தனர்.  கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்பதற்கு சாட்சியாக ரவி கண் முழித்து ஜுரமும் இறங்கி நலம் பெற்றது விந்தையே. டாக்டரும் இதை ஒரு miracle  என்று தான் சொன்னார்.
மறுபடியும் இரண்டரை வயதாகும்போது  அவன் (ரவி) . அடிக்கடி வலியால் அழுவான். டாக்டரிடம் காட்டியதில் அவனுக்குHernia என்றும் operation செய்யவேண்டுமெனவும் கூற, 13 நாட்கள் ஆஸ்ப்பத்திரியில் இருந்து operation ஆயிற்று. ( அப்பொழுதெல்லாம் அது major operation) இப்பொழுதெல்லாம் சர்வ சாதாரணம்.

              பத்து மாத இடைவெளிக்குப்பிறகு  இரண்டாவது பிள்ளை  பாலாஜிக்கு urine  போகமுடியாமல் ஏகவலி. டாக்டரிடம் காட்டியதில் beriam test, இன்னும் பலபல சோதனைகளை செய்து, right kindney ல், ஒரு tumerஉள்ளதாலும் , அதை operetion செய்ய வேண்டுமென சொல்ல, அவனுக்கு இரண்டரை வயதுஎப்படித்தாங்குவான் என,  நானும், என் கணவரும் கதி கலங்க, இதற்குப்பணத்திற்கு எங்கே போவது என குழம்ப, கடைசியில் எங்கள் குலதெய்வத்தின் அருளால் எங்கள் குடும்ப டாக்டர் தன் குருவான பெரிய டாக்டரிடம், இந்த தம்பதியர்கள்மூத்த  பிள்ளையின் Herenya operetion மூலம் ஆடிப்போயிருக்கிறார்கள், இந்த operetionஐ , குழந்தை தாங்குமா? என்பதை விட,இவர்களால்
தேகத்தாலும், மனத்தாலும், பணத்தாலும்,தாங்க முடியுமா என்பது கேள்விக்குறி, என்று சொல்லி,தான் சில, மருந்துகள் மூலம் சில மாத வைத்தியத்தில், குணப்படுத்த முடியும், என உறுதி கூற,கடைசியில் தினம் ஒரு lnjection  (Comycin) ஒரு மாதமும், இரண்டாவது மாதம் ஒன்றுவிட்டு ஒரு நாள் வீதமும், மூன்றாவது மாதம் வாரம் ஒரு முறையும், இப்படி மாதக்கணக்கில் வைத்தியம் செய்தபின் குழந்தை பிழைத்தான். அதன்பிறகு அவன் உடம்பைத்தேற்ற பலமாதங்கள் உழைத்தோம் என்பது வேறு விஷயம்.   ஆக இவ்வளவு வியாதிப்புயலுக்குப்பின் ( எங்கள் இருவருக்கும் 1947 இலிருந்து 1956 வரையில் ஏழரை நாட்டுப்பீடை என்பது இருந்ததால்தான் இவ்வளவு கஷ்டத்தை அனுபவித்தீர்கள் என்று ஜோசியர்கள் சொல்லி தப்பித்துக்கொண்டார்கள் !)  பல மாதங்கள் உருண்டொடின. என் மாமனாரின் காலமும் அந்த வீட்டில் தான் ஆயிற்று.  அப்பொழுது நான் ஆறுமாத கர்ப்பிணி.

என் மாமனாரின் கடைசி நாள் அவர் காலமானபொழுது அவர் பகவ ந் நாமாவைச்சொல்லிக்கொண்டு தேகத்தை விட்ட கதை ஆங்கிலத்தில் இவரின் blog  இல் படிக்கவும்.
(தொடரும்)



              

Thursday 5 November 2015

1. சிறு பிராயமுதல், வாழ்க்கையின் விளிம்பு வரை - பக்கம் 1

நான் 13 பேர்களுடன் பிறந்தேன்.  அதில் கல்யாணவயதை அடைந்தவர்கள் 9 பேர்கள் 7ஆணகளும், 2 பெண்களும்.என் தந்தை பிள்ளைகளைப்படிக்கவைத்து,  வேலைக்கு அனுப்பினார், பெண்களை சிறுவயதிலேயே கல்யாணம் செய்து கொடுத்து விட்டார். பிள்ளைகளை படிக்க வைப்பதே பெரிய காரியமாய் இருந்தது போலும். இவ்வளவு பெரிய சம்சாரத்தில் பிள்ளைகளைப்படிக்க வைத்து, வேலை வாங்கிக்கொடுத்து, பெண்களை கல்யாணம் செய்து கொடுத்திருக்கிறார்கள் என்றால் சாமான்யமல்ல, அதற்கு அவர்களுக்கு. ஒரு பொற்கோயில் கட்டினாலும் தகும்!!!  என் அக்காவை என் ஒன்றுவிட்ட மாமா பிள்ளைக்கும், என்னை, என் அக்காவின் சிபார்சில் ஒரு BA Hons பட்டதாரிக்கும் ,கல்யாணம் செய்து கொடுத்தார்கள். என் கணவர் கிருஷ்ணமூர்த்தி கடைசி வருடம் BA Hons படித்துக்கொண்டருந்தார். காதில் கடுக்கனும், கட்டுக்குடுமியமாய் இருப்பார் பிள்ளை ரொம்ப லக்ஷணம் என்று சொல்லிக்கொண்டார்கள். ஆனால் கர்னாடகமாய் இருக்கிறாரே என நான் வருந்தியதுண்டு. ஆனால் பிற்காலத்தில், இப்பேற்பட்ட உலக மேதையையா அப்படி நினைத்தோம்  என்றும் வறுந்தியதுண்டு (சந்தோஷத்தில்)!!என் அம்மா கடைசிபெண்ணான என்
கல்யாணம் முடிந்ததும், நான் என் முதல் குழந்தை பத்மாவை வயிற்றில் சுமந்துகொண்டிருந்த சமயம், தன் கடமை முடிந்தது என இறந்துவிட்டார்

               கிருஷ்ணமூர்த்தி ( VK) தான் வேலை பார்க்கும் சிதம்பரத்தில் univercity க்குள் வீடு கிடைக்காமல் பின் வெளியில் வீடுபார்த்து, என்னையும் குழந்தை பத்மாவையும் அழைத்துக்கொண்டார்
எங்களுடன் தன் அப்பாவையும், சித்தியையும், (அம்மாவின் தங்கை)' கூட அழைத்துப்போனார்.அப்பொழுது எனக்கு பாத்திரம், பண்டம் ஜாஸ்த்தி இல்லை.என் கல்யாணத்துக்குக்கொடுத்த சொல்ப பாத்திரத்திரந்தான்.
ஒரு சாக்கு மூட்டை பாத்திரம்,
ஒரு சாக்கு மூட்டை புஸ்த்தகம் ,ராமர் படம், பூஜைப்பெட்டி. இது தான் எங்கள் சொத்து. எங்கு போனாலும் எங்கள் குலதெய்வமான ராமர் படமும்  ராஜராஜேஸ்வரி விக்ரஹமும். கூடவே துணைவருவார்கள்.(இன்றுவரை அவர்கள்தான் எங்களை ரக்ஷப்பவர்களும்கூட)

            சிதம்பரத்தில் என் கணவர் பார்த்த வீட்டுக்கு வந்தோம். அதில் கால் வைத்ததும் எனக்கு அதில் எப்படி குடித்தனம் செய்யப்போகிறோம் என்று தூக்கி வாரிப்போட்டது.  ஒரு பெரிய கூடத்தில் பல அறைகள் , அதில் பல குடுத்தனங்கள்,privacy என்பது கிடையாது .சாப்பிடும்போது
எல்லாக்குடித்தனங்களும் பார்க்கும்படி இருக்கும். அவர்கள் சாப்பிடும்போதும் அப்படியேதான்.    தவிர நாங்கள் வந்த மறு நாள் வீட்டுக்கார அம்மாள் என்னைக்கூப்பிட்டு, கிணற்றில் நீர் இறைக்க அவரவர் தாம்புக்கயர்தான் போட்டு நீர் இறைக்க வேண்டும் என்றும், பின் அவரவர்    
கழட்டிக் கொள்ளலாம் என்றும் சொன்னாள். எனக்கு பக்கென்றது. 10 நாள் சென்ற பின் மாமியை Friend பண்ணிக்கொண்டபின் நான் மாமியிடம் என் யோஜனையைச் சொன்னேன்.அதாவது,  நாம் ஒருவர் தாம்புக்கயிர் போடுவது, அது இத்துப்போனபின் , அடுத்தவர் வாங்கிப்போடுவது என்று என் யோஜனையைச் சொல்ல, மாமியும் என் பேச்சுக்கு, சம்மதித்தாள். நாட்கள் ஓடின, அங்கு மூன்று மாதம் இருந்தோம்.  பின் ஆறுபட்டை  வீடு என்ற பெரிய வீட்டுக்கு வந்தோம். அங்கு கீழே ஒரு குடித்தனம் , மேலே வீட்டுக்காரமாமியும், இன்னொரு குடித்தனமும். ஆக ஒரு வீட்டில் நாலு குடித்தனம். முந்தய வீட்டுக்கு இது எவ்வளவோ தேவலை. வீடும் கொஞ்சம் modern ஆக இருந்தது அதில்தான் என் பெண் பத்மா எல்லோருக்கும் செல்லக்குழந்தை. அந்த வீட்டில் ஆறு மாதம் இருந்திருப்பேன். பின் நான் பிரஸவத்திற்கு என் பிறந்தவீடு சென்றேன். எனக்கு     இரட்டைக்குழந்தை பிறந்து, என் முதல் குழந்தை பத்மாவுடன் சேர்ந்து ஆக மூன்று குழந்தைகளுடன் என் வீட்டிற்கு என் அப்பாவுடன் வந்தேன். அப்பொழுது என் கணவர் என்னை வரவேற்க surprise ஆக இருக்க நினைத்து, முதல் ரயிலில் ஏறி, பின் நான் வரும் ரயலில் ஏறி எங்களுக்குத் தெரியாமல், எங்களை அதே வண்டியில் பார்த்து, எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்த நினைத்து, பின்  சற்றே கண் அயர்ந்திட,இறங்க வேண்டிய ஸ்டேஷனைக்கோட்டை விட்டு, அடுத்த ஸ்டேஷன்வரைபோய் இறங்கி பின் வீடு வந்தது ஒரு தனிக்கதை.!!

                        பின் அந்த வீட்டில் 10மாதம் இருந்தோம், முதல் குழந்தையுடனும்,
இரட்டைக்குழந்தைகளுடனும், பாடுபட்டாலும், அதில் தாய்மையின் சுகம் இருந்தது என்னமோ உண்மைதான். அந்தக்கடவுள் நான் படும் பாட்டைப்பற்றி அநுதாபப்பட்டாரா, அல்லது என்னை அவஸ்த்தைக்குள்ளாக்கி ,ஆனந்தப்பட்டாரா என அந்தக்கடவுளுக்குத்தான் தெரியும்!!  நாலுநாளில் இரட்டையர்களில் ஒரு குழந்தையை நான் இழக்க வேண்டியிருந்தது.
ஆம், ரத்த பேதி வந்து காலன் பறித்துக்கொண்டுவிட்டான். அப்பொழுது பறிகொடுத்த தாய் அலறி  அழ,குழந்தையின் தகப்பனார் வேலையில் வேறு ஊரில் இருக்க,தான் அவர் முடியாத நிலையில் தகப்பனார் தவிக்க, குழந்தையைப்புதைக்க வேண்டிய நிலை அந்த தாய்க்கு .
இதை விதி என்று சொல்வதா  இல்லை கடவுளின் சதி என்று சொல்வதா?  அந்த கடவளுக்குத்தான் வெளிச்சம்.

            பின் மதுரைக்குக் குடித்தனம் மாற்றப்பட்டது. அதுவும் அவசரத்தில் , வாடகைக்குறைவில் வேண்டுமானால் எப்படிக்கிடைக்கும் ? ஒரு சமையல் உள்ளில் வீட்டுக்கார மாமியும்  நானும் பாதி பாதி சமையல் உள்ளில் சமைப்போம். ஒரே கூடத்தில் இரு குடும்பமும் சாப்பிடுவோம். மாடியில் படிப்பதற்கும் படுப்பதற்கும் ஒரு அறை உண்டு. அதில் மூன்று மாதம் இருந்தோம். பின் ஆதிமூல அக்ரஹாரம் என்ற  இடத்தில் அதே வாடகையில் தனி portion வீடு கிடைத்து .         அங்கு பத்து மாதம் இருந்தோம். கடவுள் அல்லாடும் தம்பதிகளுக்கு கஷ்டம் வேண்டாம் என நினைத்தாரோ என்னமோ , கட்டியால் அவஸ்த்தை பட்டுக்கோண்டிருந்த இன்னொரு குழந்தையையும்
பறித்துக்கொண்டார்.
  (தொடரும்)

           



















.

Monday 12 October 2015

வேலாயி (வேலைக்காரி) படுத்தும் பாடு.

 எங்கள் வேலைக்காரி பெயர் வேலாயி ஆனால் அவள் பரமசிவனின் நெற்றிக்கண்ணை தன்னிடம்
வைத்துக்கொண்டுவிட்டாளோ என தோன்றும். தான் ஒத்துக்கொண்ட வேலையைத்தவிர
தப்பித்தவரி கூட ஒரு வேலை செய்துவிட மாட்டாள். அது அவள் எடுத்துக்கொண்ட சபதம் போலும்.

          காரியத்தில் மட்டும் கணக்கல்ல, வேலைக்கு வரும் நேரமும் கணக்குத்தான். சரியாக 7 மணிக்கு வந்து விடுவாள்8.30 வேலையை முடிப்பாள், 10 நிமிடம் முன்னால் முடிப்பாளே தவிர
பின்னால் போகாது
.
         வேலைசெய்யும்போது நாம் பார்க்கிறோம் என்று பார்ப்பதில் படு கெட்டிக்காரி. அதற்கே அவளுக்கு ஒரு சபாஷ் கொடுக்கலாம்.இரண்டு வருட அனுபவத்தில் அவள் சிரித்து நான்
பார்த்ததில்லை .( அவளுக்கு பல் இருக்கா என எனக்கே சந்தேகம்) நாம் ஏதேனும் வேலை சொன்னால் முறைப்பாள். அவளுக்கு முறைப்பதும், குறைப்பதும், கை வந்த கலை.

         அவள் வந்ததும் ஏறிய Bpஅவள் சென்றபின் normal ஆகிவிடும். அடிக்கடி என் கணவர்
அவளை தலை முழுகு என்பார். நானும் தலை முழகுவேன் , தலைக்கு ஷாம்புப்போட்டு!!!
என் கணவர் அடிக்கடி சொல்லும் சொல் " நீ எனக்குக்கூட பயப்படுவதல்லை, வேலாயியிடம் பய பக்தியோடு இருக்கிறாய்". என்பார். நான் மனதிற்குள் சொல்லிக்கொள்வேன். " அவள்என்னை விட்டுப்போய்விடுவாள்" உங்களால் போகமுடியாதே !! என.


         வேலாயி மாதம் இரண்டு நாள் leaveஎடுப்பாள். அது அவள் கேட்டுக்கொண்ட condition.
சொல்லாமல் leave எடுக்க மாட்டாள். சொன்ன நாளில் மழையோ, வெய்யிலோ, புயலோ வந்து
விடுவாள். ஆனால் ஒவ்வொரு்நாளும்  மனதால் அவளை வேலையை விட்டு நீக்கி, மறு நாள்
வறவேற்பேன்.

        உங்களுக்கு யாராவது நல்ல வேலைக்காரி  தெரிந்தால் அனுப்புங்களேன். அப்படி
அனுப்புபவர்களுக்கு ஒரு பரிசு உண்டு. அந்தப் பரிசு இந்த வேலாயிதான்!!!!!


Monday 5 October 2015

மாமாவின் மஹத்துவம்


என் அப்பாவை நாங்கள் மாமா என்றுதான் அஉழைப்போம். என் அப்பாவை பக்கத்து வீட்டுக்குழந்தைகள்மாமா என்று அழைக்க என் அண்ணாவும் அப்படியே அழைத்ததாக என் அம்மா கூறுவாள்.      மாமாவுக்கு(அப்பா) தாயாரும், இருதங்கைகளும் உண்டு. என் பாட்டியும், அத்தையும்,வந்தால்
அவர்களின் அட்டஹாஸம் சொல்லமுடியாது. தன் பிள்ளைவீட்டில் நிறைய மளிகைசாமான் இருக்கிறது என தண்ணீருக்குள் பதிலாய் எண்ணையும், நெய்யை  விட்டு உப்புமா செய்வாள் . அதில் கண்ட பலன் வேகாத உப்புமா செய்த உபத்திரவம்தான்.

     என் அம்மாவுக்கு அடிக்கடி அர்சனை கிடைக்கும். என் அம்மாவுக்கு தலையில் நிறைய மயிர்உண்டு, என் பாட்டியின் வசவு கோரமயிர் குடியைக்கெடுக்கும்என்பது. என் அத்தைக்கோ தாலிச்சரட்டைத்தாண்டாது தலை மயிர்!

எங்கள் அப்பாவுக்கு நாங்கள் 13பேர். அதில் கல்யாணவயதுவரை 
வளர்ந்தவர்கள் 9பேர். 7பிள்ளைகளும்,2பெண்களும். பெண்களைத்தவிர
7பிள்ளைகளையும், படிக்க வைத்து, வேலைக்கு அனுப்பிவைத்தார்
பெண்களை கல்யாணம் செய்துவைத்தார். அதற்கே அவருக்கு ஒரு 
கோயில் எழுப்பவேண்டும்!

     என்அப்பா 4குடும்பத்துக்கு ஒரு பிள்ளையாக கிராமத்தில் ராஜாமாதிரி
இருப்பாராம். அவருக்கு ஒரு ரேக்ளா வண்டி உண்டாம்( ரேக்ளா வண்டி 
ஒருவர் உட்காரும்படி,ஒரு காளையுடன் இருக்கும்). அப்பொழுது அதுதான்
Two wheeler .அவர் SSLC பாஸ் செய்து, ரயில்வே உத்தியோகம் பார்த்த
முதல் பிள்ளை என் அப்பா. English பேசத்தெரிந்தவரும் கூட!! முதலில்
Signaler , பின்booking clerk, அதன் பின் station master  ஆனார்.
அவர்  service ல் இருக்கும்பொழுது. அவருக்கு ரொம்ப நல்ல பெயர்
தன் வேலையில் பொறுப்பானவர். அவர் dutyல் இருக்கும்பொழுது
வெள்ளைப்pantம், white shirtம். Green ஜரிகைத்தொப்பியும் அவர்
கம்பீரமாய் நடந்துவருவது  கண்ணை விட்டு அகலாது. Dutyயிலிருந்து
வந்ததும், pant and shirt ஐ coat standல் மாட்டிவிட்டுத்தான் உட்காருவார்
(அப்பொழுது. Hangar எல்லாம் கிடையாது.) அவருக்கு உறுதுணையாய்
என் அம்மா குடும்பத்தை நடத்தினாள். குழந்தைகளைப்பெற்றெடுத்து,
வளர்த்து, வியாதிகளிலிருந்து எங்களை மீட்டு, சில குழந்தைகளை பறிகொடுத்து,தன் உடல் பலஹீனத்தைப்பாராட்டாமல் ஈடு கொடுத்து, குடும்பத்தை நிலை நிலைநிறுத்தியவள். என் அம்மாவுக்கு ஒரு கோடிநமஸ்க்காரம்.

         அவர். Retire ஆனதும்  தன் சம்பாத்யத்தில் வீடு வாங்கினார். எங்கள் எல்லோருக்கும் கலயாணமும் ஆயிற்று. சொந்த வீட்டில் என் அம்மாவுடன் சில காலமும், பின் பிள்ளையிடம் பல காலமும் வாழ்ந்தார்.

வயதானபின், எல்லாக்குழந்தைகளுடனும் இருப்பார்.அப்பொழுது அவர்
மிடுக்கான  நடையும், வெள்ளை வெளேறெ ன வேஷ்டியும், கை வைத்த மல்
ஜிப்பாவும்,கையில் walking stick, வெத்தலைப்பெட்டியுடன் கம்பீரமாய்
நடந்து வருவார். அவருக்கு ஒரு புத்தக வைத்திருப்பார், அதில் விகடன்,
குமுதம், தின இதழ் இவைகள் இருக்கும். News paper ல் படித்தவற்றை
Tickmark பண்ணியிருப்பார். பின் இரவுக்குள் எல்லாப்பக்கமும் படித்து
விடுவார். அதுதான் அவரின் home work!

     எல்லோரிடமும்  வரும் வழக்கப்படி என் அக்கா வீடும் செல்வார். என் 
அக்காவுக்கு 10குழந்தைகள், வாடகை வீடு ,அப்படி இருந்தும் என் அக்கா
தன் அப்பாவுக்கு படுக்க ஒரு கட்டில் கொடுத்திருப்பாள்.அவர்மதியம்
படுத்துக்கொண்டு,விகடன் படிப்பார் அப்பொழுது தூக்கம் கண்ணைச்சுழற்றும்
அப்படியும் விகடனை பையில் போட்டுவிட்டுத்தான் படுப்பார். தூக்கம் கலைந்து விடும்!ஏனென்றால் என் அக்கா குழந்தைகள் எடுத்துப்படித்து விட்டு எங்காவது வைத்துவிடுவார் கள் என   அசைக்க முடி யா த  நம் பிக்கை !

     என்னிடம் வரும் நாட்களில் நான் மதுரை, சிதம்பரம் என இருந்துவிட்டு BITS பிலானியில் இருந்தேன். என் கணவர் அங்கு prof. ஆக இருந்தார் ராஜஸ்த்தானாகருந்தாலும் பிர்லா பிலானயை ஒரு சோலை வனமாக மாற்றருந்தார். அது ஒரு அழகான காலனி .தனித்தனி பங்களா. என் அப்பா பத்து வீடு வரை நடந்து விட்டு வீட்டுக்கு வாந்ததும் என் பிள்ளையிடம் ஒரு மைல் இருக்குமா
என்பார் அதற்கு என் பிள்ளை பாலாஜி  ஐய..ஐந்து மீட்டர் கூட இருக்காது என்பான்.
இல்லை கட்டாயம் ஒரு மைல் இருக்கும் என்பார்.அவர் வயதிற்கு அது சிரம்மாய் ஒரு மைல் போல்
தெரிந்திருக்கும் போலும்.என் மைத்துனர் பிள்ளை விடுடா தாதா சந்தோஷப்பட்ட்டும் என்பான்.
என் பிள்ளை விடமாட்டான். உண்மையே பேசும் சத்யசந்தன்.(இப்பொழுதும் அவன் அப்படித்தான்)
பேச்சில் அவ்வளவு precision.

என் அப்பா காலையில் 3/4 கப் காபி. 10.30 க்குள் lunch. மதியம், 3க்கு, 1/2cup காபி. இரவு 7.30க்கு இரவு உணவு இது  தவிர ஒன்றும் சாப்பிட மாட்டார். இது அவர் 50 தாவது வயது முதல் ஏற்படுத்தக்கொண்ட கட்டுப்பாடு. யாரையும் குறைகூறமாட்டார். பிறர் யாரிடமும்உதவி பெறமாட்டர். எங்கு செல்கிறாரோ அவர்களைப்பற்றிய முழுவிபரமும் ஞாபகத்தில் வைத்திருந்து
விஜாரிக்க தவற மாட்டார். உதாரணத்துக்கு, என் கணவர் பெரிய பெரிய கணித்மேதைகளுடன்
தொடரபுகொண்டவர்.என் கணவரிடம் பேசும்போது இவருடைய நண்பர்கள் பெயரைச்சொல்லி (American name ) மறக்காமல் விஜாரிப்பார்.

95 வயது வரை எல்லோரிடமும் இருந்து, பின் சொந்த ஊர்,தான் பிறந்த இடம்
என தன் கிரம்மான மகாதானபுரத்திலற்கு வந்து தான் கட்டிய வீட்டில், என் அம்மா வாழ்ந்த
வீட்டில், மூத்த பிள்ளையிடம் தன் 95தாவது வயதில் உயிர் நீத்தார் அந்த உத்தமர்.

                                        முற்றும்   

Wednesday 2 September 2015

அத்திம்பேரின் ஹாஸ்யம்.

                                              4. அத்திம்பேரின் ஹாஸ்யம்

அக்கா தன் பெண்களுக்கு பண்ணும் கல்யாணம் சம்பந்திப்பேரால் புகழ்பாடியபடி இருக்கும்.
அக்கா வைத்த கட்டுச்சாதக்கூடையைப்பற்றி இன்று வரை கூறிக்கொண்டிருக்கிறார் ஒரு மாப்பிள்ளை.

           காலை வேளையில் காபிக்குப்பதில் கஞ்சி சாப்பிட்டால்  நல்லது என காப்பிக்கி பதில் கஞ்சி ஆரம்பமாயிற்று.சென்ற்வாரம்தான் மாதச்செலவில்  சர்க்கரை ஜாஸ்த்தியாகியுள்ளது எனவும்சர்க்கரையை
குறைக்க வேண்டும் எனவும் பட்ஜட்டில் ஏக மனதாய் தீர்மானம் செய்யப்பட்டது.அத்திம்பேர்
அதனால் கஞ்சிக்கு கொஞ்சம் சர்க்கரை குறைவாய் போட , குழந்தைகள் குடிக்காமல் strik
பண்ண, பின் அத்திம்பேர்  ஒன்றரைப்பங்கு சர்க்கரை போட ஆக அத்திம்பேர் சிக்கனம்
அந்தரத்தில்


அத்திம்பேரின் நல்ல மனசு யாருக்கும் வராது . யார்வந்தாலும் ஊருக்குப்போக விடமாட்டார்.
வந்தவர்கள் அவரிடம் சொல்லிக்கொண்டு போன வழக்கமே இல்லை.
இவ்வளவு நல்ல அத்திம்பேர் தன் மாமியார்வீடு வந்தால் மட்டும் மாப்பிள்ளை முறுக்குப்பண்ணிப்பார்
காபி குடியுங்கள் என இரண்டுதரம் தரம் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பார்.
இத்தனைக்கும் அவர்மாமியார் அவருக்கு சொந்த அத்தை !!!

Saturday 29 August 2015

.காசியப்பா store.

 அக்கா, திருச்சியில் காசியப்பா store  க்கு வந்தாள் அப்போது, காவேரி நீர் கணக்கில்லாமல் வரும்
(பிற்காலத்தில் குடம் கணக்குப்பண்ணி தண்ணீர் எடுத்த நாளும் உண்டு) அக்காவுக்கு டவுன் வாழ்க்கை  பக்கத்தாமெல்லாம் friends  அடுத்தாத்து ஜானகி மாமி, பக்கத்தாத்து மணி மாமி,
மில்லாத்து மாமியார், எதிர் வீட்டு ராஜாம்மாமி  என அக்காவுக்கு ஏக friends . அக்காவின்
இளமை வயது வேறு,கையில் தங்க வளையலுடன் பல கலர் கண்ணாடி வளையலகளும்
கையில் மினுமினுக்க,நிறுத்தி வைத்த மாதிரி மடிசார் கட்டும் தலையில் பிச்சோடாவும் மூக்கிலும்,
காதிலும் வைரம் மின்ன ,அக்கா மதுரை மீனாக்ஷஈ மாதிரி இருப்பாள்

                    மதியத்தில் மீனாக்ஷஈ யானாலும் 8மணிக்கு ஆபீஸ் செல்ல சாப்பிட உட்காருவார்
அத்திம்பேர், 7.30 மணிக்கு அரைக்கீரை வாங்கி வருவார்,அதைப்பார்த்து அக்கா,பல்லைக்கடிப்பதைப்பார்த்து அந்த நரசிம்ம ஸ்வாமியே ஆச்சர்யப்படுவார்அப்படிக்கடிப்பாள்
( அக்காவிக்கல்லவாதெரியும் அரைகீரையை ஆய்ந்து சமைக்க ஏற்படும் கஷ்ட்டம்?)
 ஒரு வழியாய் அத்திம்பேர் சாப்பிட்டு , ஏலம் கிராம்பு வாயில் அடக்கிக்கொண்டு, வேஷ்டி நுனியை, கையில் பிடித்துக்கொண்டு, ஓட்டமும் நடையுமாய் ரயிலைப்பிடிக்க ஓடுவார்
( அவர் கஷ்ட்டம் அவருக்கு).


              அக்காவின் ஒவ்வொரு பிரஸவத்தின் போதும், என் அத்திம்பேர் சமையலுக்கு. மாமி
போடுவது வழக்கம். சுய ஜாதியாய் ( திருச்சிப்பக்கம் சொந்த ஊராய் ்இருந்தால் சிலாய்க்யம்)
கால்களில் வீக்கம் இல்லாமல் ( என் அத்திம்பேருக்கு யானைக்கால் என்றால் ரொம்ப பயம்)
சிரித்த முகமாய்  குறைந்த சம்பளத்தில் தேடுவார் . கிடைப்பது என்னமோ அரிதுதான், அதனால்
எல்லா நண்பர்களிடமும் சொல்லிவைத்திருப்பார்,   மாதம் ஓடிக்கொண்டிருக்கும் ஆனால்
மாமி கிடைக்கமாட்டாள் .  என் அம்மாவும் ,அக்காவும் அவஸ்த்தை படுவார்கள். மாமி கிடைத்தால்தான் என் அம்மா ஊர் திரும்ப முடியும். மாமி. தேடும் படலம் உச்சத்தில் இருக்கும்
இரண்டு மாத appointment க்குமூன்று மாத தேடல் !!!!

அக்காவின் அடுத்த ப்ரஸவத்ற்கு அத்திம்பேர் மூன்றாவது மாதமே சமயல்கார மாமி தேட
அது 6 மாத்த்தில் கிடைக்க , என் அம்மா reliving  cook கிடைத்துவிட்டாள் என சந்தோஷப்பட,
அம்மா ஊருக்குப்போனாலும் சமயலுக்கு மாமியார் இருக்கிறாள் என அக்கா அகமகிழ,
அத்தனையும் கண்களை விட்டு அகலாகாக்ஷஈகள்

         அக்கா உறவினர் யாராவது வந்தால் தக்க ஸன்மானம் செய்தி அஅனுப்புவதில் வல்லவள்
தன் பதியின் பொருளாதாரம் அப்பொழுது அக்காவுக்கு மறந்து விடும். கடையில் அடுத்த மாதம்
கொடுத்துவிடலாம் என,ரவிக்கைத்துணி வாங்கி உறவினரை உற்சாகப்படுத்தி அனுப்பி விடுவாள்
அடுத்த மாதம் அத்திம்பேர் கத்தோகத்து.  கத்த  அக்கா அதை சமாளிக்க, அது அக்காவைத்தவிர. வேறு
யாராலும் முடியாது.

    அனால்  அக்கா சாமர்த்தியம் யாருக்கும் வராது!! வந்த விருந்தினருக்கு செய்து போட்டு
எப்படித்தான் சமாளித்தாளோ?  இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை ,ஆனால் உள்ளிருப்பவர்களுக்குத்தான் தெரியும் இல்லை என்று!!       (தொடரும்)    

                                     

Tuesday 25 August 2015

கல்கண்டார்கோட்டை வந்தகதை

அத்திம்பேரைப்பற்றிய சிற்சில ஹாஸ்ய நினைவுகள் (தொடர்ச்சி)

                                       கல்கண்டார்கோட்டை வந்த கதை

கல்கண்டார்கோட்டை என்ற கிராம்த்தில் என் அத்திம்பேரின் அப்பா சீனுவாசய்யர்,ஒருவருக்கு வட்டிக்கு கடன் கொடுத்திருந்தார். அதை அவரால் திருப்பித்தரமுடியவில்லை. அதனால் அவர் சீனிவசய்யர் கடன்வாங்கியவர் கழுத்தைப்பிடிக்கவே அவர் இன்னும் கொஞ்சம் பணம் கொடுத்தால்
தன்னிடமுள்ள நிலத்தை தருவதாய் சொன்னதால், சீனுவாசய்யர் தன் பிள்ளையான, என் அத்திம்பேரிடம், பட்டுவின் நகையை விற்றால் முடியும் எனவும், அதில் கரும்புபோட்டால் காசைஅள்ளிவடலாம் எனவும், நாம் இந்த கிராம த்தில் நிலச்சுவான்தாராக (நிலத்துக்குச்சொந்தக்கார்ர்)
(மிராசுதார்) ்இருப்போம் என்றும் சொன்ன தால், அத்திம்பேர், நகையைவிற்று, நிலத்தை வாங்கினார்.  அதில் கரும்பு பயிரிட்டதிலும்,அதில் வருமான்தைக்கணக்குப்பண்ணி மகிழ்ந்ததில் ஆச்சர்யம் இல்லை.
                        கரும்பு விளைந்து, வெல்லம் செய்ய தயாரானதும் , கரும்பை சார் எடுத்து, காய்ச்சஒரு இடம்தேவைப்பட்டது. ஒரு இடம் வாடகைக்கு எடுத்தார். பின் கரும்பிலிருந்து,சாரெடுத்து, அதை பாகுகாய்ச்சி, வெல்லம் process  ல்எங்களுக்கெல்லாம் ஒரே குஷி. தினமும் கருப்பஞ்சாரும், வெல்லப்பாகும் கிடைக்கும்.
             
                          வெல்லம் வண்டியில் வீட்டுக்கு வந்தது. அதை நிறுத்து விலைக்குக்கொடுக்க தராசு ,படிக்கல் வாங்கியது. கிராம த்தில் உள்ளவர்கள் வெல்லம் வாங்கிச்செல்வதும், அப்பொழுது வருபவர்களுக்கு, அக்கா ,வாயில் வெற்றிலையுடன் ,மெட்டி ஒலி ஒலிக்க நடந்து வந்து, தராசை தன் மாமனாரிடம் கொடுப்பதும் அவர் நிறுத்து விலைக்குக்கொடுப்பதும் கண் கொள்ளாக்காட்சி.
                               
                     மாதம்  பல சென்றது. பாக்கிவெல்லம் விற்பனையாகாமல் தன்மணத்தைப்பரப்பிஆட்சிசெய்தது.அடுத்த வருடம் எள்ளு போட்டார்கள் ஆனால்புஞ்சையில்போடும் எள்ளை நஞ்சையில் போட்டதால் பலன் தர மறுத்துவிட்டது.இந்த நிலப்பரீட்சைவேண்டாம்என கைவிட்டுவிட்டார் என் அத்திம்பேர். சீனிவாசய்யர் தன் பிள்ளைக்கு சாமர்த்தியம் போதாது என திட்ட அடுத்த வருடம் ஒன்றும் போடாமல் விட்டு விட்டார். நகையும் போய், நிலமும் போனதுதான் மிச்சம்.

வெகு நாள் வரை திராசும் படிக்கல்லும், அத்திம்பேர்  நிலச்சுவான்தார் என்பதை,கட்டியம் கூறிக்கொண்டிருந்ததும் ,அக்காவின் அர்ச்சனைக்கு அத்திம்பேரை ஆளாக்கிக்கொண்டிருந்ததும் தனிக்கதை.

    அலைகள் தொடரும்





Monday 24 August 2015

அத்திம்பேரைப்.பற்றிய சிற்சில ஹாஸ்ய நினைவுகள்

 அப்பொழுது எனக்கு வயது 11 இருக்கும் 1942 war நடந்துகொண்டிருக்கும் சமயம்,எங்கள் குடும்பம்
கோயமுத்தூரிலிருந்து  மஹாதானபுரம் என்ற கிராமத்திற்குவந்தோம் (அம்மா,என் அண்ணன்கள்,
ஜயா,சீனா,சத்தி,மற்றும் நான் )லாரியில் ஜயா அண்ணா வந்தார் அவருக்கும் 18 வயது இருக்கலாம்
ஜயா அண்ணா ஒரு பொறுப்புள்ள பையன் என்பது என் அம்மாவின் ஆணித்தரமான நம்பிக்கை!!!
( அது சாத்தியமான உண்மை) இரவு 7  மணிக்கு லாரியுடன் வந்த அண்ணாநாங்கள் இன்னும்
வரவில்லைஎன்றதும்,ரயில் late  என்றதும், லாரி சாமானை திண்ணையில் இறக்கச்சொல்லிவிட்டு
எங்களை அழைத்து வர ரயிலடிக்கு வந்து விட்டார்!!   ஏனெனில் வரும் வழி ஒரே இருட்டு,தவிர,
வண்டிவசதி கிடையாது, திருட்டுபயம் வேறு. அம்மா வேறு வைரத்தோடும், கழுத்து நிறைய நகையுமாக வருகிறாள் ஆக, அண்ணாவைப்பார்த்ததும்தான் அம்மாவுக்கு உயிரே வந்தது
 பிறகு அண்ணாவுடன் வீடு வந்துசேர்தோம்.அது ஒரு பெரிய achievement .
இது தொடரும்

Sunday 23 August 2015

1. துதிக்கை வணக்கம்

துதிக்கையில், துதிக்கை, துணை, வருமே
I
உனை, நினைக்கையில், இனிக்கும், மனம், வருமே

முருகனுக்கு மறு பெயர் அழகன்.