Monday 8 February 2016

ஆறாவது அண்ணாவின் அரிய செயல்கள்

என் ஆறாவது அண்ணாவின் பெயர் ஜயராமன். நாங்கள் அவரை ஜயம் என்றே கூப்பிடுவது வழக்கம். சிறு வயது முதலே பெயருக்கு ஏற்ற மாதிரி ஜயராமனாய்  திகழ்ந்தவர். என் அம்மாவுக்கு,அவர் சிறுவனாய் இருந்த பொழுதுமுதல்,அவர் மேல் அபார நம்பிக்கை.கொடுத்த காரியத்தை
பொறுப்பாகவுும், திறம்படவும்  செய்துமுடிப்பார். தைர்யசாலியும்கூட. அதனால்என் அம்மா, அவருக்கு 15 வயதாயிருக்கும்பொழுதே, 25வயது பிள்ளையிடம் யோஜனை கேட்பதுபோல் கேட்பார். அவ்வளவு புத்திசாலி அவர். வீட்டை காலிசெய்யவேண்டுமா?  ஜயா அண்ணாஉதவியுடன்தான்.
உயர்ந்த பொருள் வாங்க வேண்டுமா ஜயாதான். லாரியில் சாமானுடன் செல்லவேண்டுமா ஜயாதான். ஆக ஜயராமனாய் விளங்கியவர் அவர்.பட்டப்படிப்புபெற்று பதவி உயர்வு அடைவது பெரியதல்ல,
SSLC படித்து, படிப்படியாய்  பல வித பரீட்சை எழுதி, பதவி உயர்வு பெற்று, chief accounts officer பதவி பெற்றார். பதவியில் இருக்கும்பொழுது, ரயில்வேயில் ஏகப்பட்ட சலுகைகள் உண்டு. வேலையில் நேர்மையும் கண்டிப்பும் மிக்கவர். மற்றவர்களும் அப்படி இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பவர், தன்னிடம் தப்பு இருந்துவிடக்கூடாது என்பதில் அதிக கவனமுள்ளவர்.தம்பி தங்கையுடன் மிக்க பாசமுள்ளவர்.

              ஒரே பிள்ளைக்கு  நல்ல இடத்தில் கல்யாணம் செய்து வைத்து, ஓய்வு பெற்றதும் பிள்ளையிடம், சேர்ந்து, ஒற்றுமையாய் இருப்பவர் .ஒருவர்கையையும் எதிர்பாராமல் தான் மற்றவர்க்குசெய்யும், நிலையில் இருப்பவர். மனதுக்கு விரோதமாய் ஒரு போதும் நடக்கமாட்டார்.
94 வயதிலும் துள்ளி எழுந்து நடமாடுபவர். அவரின் திறமைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். அவர் தான் என் ஜயா அண்ணா.

Sunday 7 February 2016

மேதை என் கிட்டு அண்ணா

               நாங்கள் என் தாய் தந்தையருக்கு 9 பது பேர்கள். என் ஐந்தாவது அண்ணா பெயர் கிட்டு.
படு சுட்டியது இருப்பார்கள். என் நாலாவது அண்ணாவுக்காக என் அப்பா ஒருவரிடம் தன் பிள்ளைக்கு வேலை வாங்கித்தர வேண்டுமென க்கேட்டு, அவரையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்கு
வந்தார்.என் நாலாவது அண்ணாவோட interview பண்ண.என் நாலாவது அண்ணாவோ அந்த வேலைக்குப்போகமுடியாது என்று சொல்ல,என் அப்பா என் அம்மாவிடத்தில் கத்த,அம்மா என்ன செய்வதறியாமல் கதிகலங்கிய நின்ற சமயத்தில் இந்த ஐந்தாவது  அண்ணா ( S S L C  , யில் Selection ஆகாமல் இருந்த இந்த கதாநாயகர்). நான் அந்த வேலைக்குப்போகிறேன் என்றாராம்!!!
வளர்த்தியிலும் peuniy யாய் இருப்பாராம்.எப்படி இவனை அனுப்புவது என என் அம்மா தயங்க,
என அப்பா வந்தவர் interview பண்ணட்டும் பின் பார்க்கலாம் என்றாராம். அந்த interview ல்
கிட்டு அண்ணா டாண் டாண் என அளித்த பதிலில்  வந்தவர் மிக்க மகிழ்ச்சி அடைந்து என் கிட்டு அண்ணாவின் முதுகில் தட்டிக்கொடுத்து ,வேலைக்குச்சேர்த்துக்கொண்டாராம். இதை என் அம்மா அடிக்கடிஎங்களிடம் சொல்லிப்பெருமை படுவாள்.

               கிட்டு அண்ணாவுக்கு தன் தம்பி ,தங்கைகள் மேல் பாசமும், பரிவும் அதிகம். தனக்கு என
ஒன்றும் வைத்துக்கொள்ளமாட்டார். அந்த சின்ன வயதில் தான் வாங்கும் சொற்ப சம்பளத்தில்
எங்களுக்குத்துணி மணி , அம்மாவுக்குப்புடவை என வாங்கி வருவார். நாங்கள் ஆவலுடன் அவர் வரவை எதிர்பார்ப்பதுண்டு.சில சமயம் side business செய்து, அதில் வரும் சொற்பதொகைலயில்
என் அக்காவையும், அவள் குழந்தைகளையும்,அழைத்து வந்து எங்களுடன் இர்ப்பார்.side busyness
என்பது, கடையில் ஜமக்காளம் வாங்கி விற்பதில்லை வரும் comition தான்!!!
இப்பொழுது நினைத்துக்கொள்கிறேன் அவர் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டுமெனஇதைஎழுதும்போது என் கண்களை கண்ணீர் மறைகிறது.

        Whttp://www.houzz.com/photos/39140304/Baxton-Studio-Prescott-Modern-Table-and-Stool-Set-with-Hidden-Storage-transitiosetshttp://www.houzz.com/photos/39140304/Baxton-Studio-Prescott-Modern-Table-and-Stool-Set-with-Hidden-Storage-transitional-coffee-tsetshttp://www.houzz.com/photos/39140304/Baxton-Studio-Prescott-Modern-Table-and-Stool-Set-with-Hidden-Storage-transitional-coffee-table-sets


                 இப்படி கொஞ்சமாய் முன்னுக்கு வந்து, பின், குண்டூர் (ஆந்திரா) சென்று புகையிலை
வியாபாரம் செய்தார்.அதில் நல்ல லாபம் கண்டு, செல்வச்செழிப்பாய் இருந்தார்.ஆஹா எவ்வளவு செல்வாக்கு அவருக்கு ! !எல்லோரும் அவரை( கிருஷ்ண மூர்த்தி காரு) என வரை ஒரு தெலுங்கனாகவே மதிப்பார்கள். அவருக்கு நான்கு குழந்தைகள் பிறந்து அதில் ஒன்று இறந்து,
வியாபாரத்திலும், நஷ்டம், ஏற்பட்டு, கங்காபூருக்கு வேலைக்குச்சென்றார், அப்பொழுது,
தன் தங்கையுடம், ஒரு பிள்ளையை படிப்புக்காக விட்டுச்சென்றார். என்னதான் தன் தங்கையுடன் விட்டாலும்,பிள்ளையின் பிரிவு எப்படி இருந்திருக்கும் என இப்பொழுது நினைத்துப்பார்க்கிறேன
(அதுவும் தாய்க்க) ஏனோக்கு அங்கிருந்து டில்லிக்கு வந்தார்.கழந்தை குட்டிகளுடன்,ஊர் விட்டு
ஊர் வருவது என்பது சுலபமல்ல. நான் எழுத்தில் வெடிப்பதிர்வு சுலபம். நடை முறையில்?
இவ்வளவுக்கு ஈடுபட்ட கொடுத்து, அவர் என்ன Graduate மல்ல. தானே ஒரு வேலையைத்தே(Royal en reeled) தன் விடா முயற்சியால், முன்னுக்கு வந்து  கோலோச்சினார். அப்படியே இருக்க கடவுள்.
விடவில்லை, ஆரம்பத்திலேயே காலுக்கு இரு குழந்தைகளைப்பரிகொடுத்தவர், பின்
வளர்ந்த பிள்ளையை உலகுக்குக்கொடுக்க நேர்ந்தது. ஆம் அந்தப்பிள்ளை தான் சன்யாசியாகி,
உலகுக்கு, நன்மை செய்யப்போவதாய், எழுதி வைத்துவிட்டு, போய்விட்டான். அவன் ஒரு MBBS
பட்டதாரி!!!  கடலில் எறிந்தாலும் என்னால் எழுந்திருக்க முடியும் என நிரூபித்தவர் என் அண்ணா .
வேலையில் உயர்த்தவும் எட்டி, கார்  டிரைவர், ஆள் படை என ராஜா மாதிரி இருந்தார்.
தன் தகப்பனாரையும் தன்னிடம் கொண்டு வைத்துக்கொண்டு, தேவைப்பட்டவர்களுக்கு,
தன் முயற்சியில் வேலை வாங்கிக்கொடுத்து, பல , பல, குடும்பங்களுக்கு, வீட்டில் அடுப்புகள், விளக்கும் எரியச்செய்தவர என அண்ணா . பின் தன் குழந்தைகள் ப்படிக்க வைத்து, வேலையில் அமர்த்தி, அவரவர் தன்னிடங்களுக்குச்சென்றபின், தன் ஓய்வுகாலத்தை, ஒரு அருமையான, flare ல்
நிம்மதியாக இருந்தார்.
                  அதே ஊரில்  உற்றார் உறவினர், இருக்க, அவர்களை, அடிக்கடி, சந்திப்பதிலும், விருந்தோம்பல், செய்வதிலும், தன் கடசிகாலத்த, நிம்மதியாக்க்கழித்து, தான் வந்த, வேலை முடிந்த, திருப்தியில் 89வது வயதில், நிறந்தர, ஓய்வுபெற்றார. இதுதான் , என் மேதை, கிட்டு அண்ணா.


       


            

Monday 1 February 2016

4. சிறு வயதுமுதல் வாழ்கையின் விளிம்புவரை. பக்கம் 4

பலகஷ்டங்கள் இடைஞ்சல்கள்  சுகங்கள் என மாறி, மாறி வந்தன.மனம்  ஒடிந்து போவதும் பின் தலை நிமிர்ந்து நிற்பதுமாக பத்து மாத காலம் ஓடியது. இவரிடமிருந்து பத்துபக்கக்கடிதம் ஒன்றுவந்தது. அதில் எங்களை US அழைத்துப்போவது பற்றி இருந்தது.பின் குழப்பம், கலக்கம், முடிவும் எடுக்கமுடியாமல் தவித்தேன் இவர் கடித்த்தில். இது மாதிரி, operchunety and rich experienceகிடைப்பது அரிதுஎன்றும்,பணச்செலவைப்பார்க்கக்கூடாது என்றும்,இதைத்தவிர விடுவது புத்திசாலித்தனமல்ல, என்று என்னை சம்மதிக்க வைத்தார். நான் தனியாக வீட்டை காலி பண்ணி,Passport, visa, வாங்கி,தனியாக நலு குழந்தைகளையும்,  எப்படி அழைத்துப்போவது என கலங்கிய போது, இவர் " உனக்கு கடித த்தில் என்னன்ன செய்யவேண்டும், எப்படிச்செய்யவேண்டும்,என்று எழுதுகிறேன் என்று தைர்யம் கொடுத்தார்.
                         என் பிறந்தவீட்டு மனிதர்களோ" இது மதுரை to தூத்துக்குடி அல்ல, " என்றும்,
நாடுவிட்டு, நாடு செல்வது என்பது சுலபமல்ல, என்று பயத்துடன் சொன்னார்கள்.  இதற்கிடையில் இரண்டு வருடமாகவே postel tuition ல் என்னை  SSLC வரை படிக்க ஏற்பாடு பண்ணிவிட்டுத்தான்போனதால், ஆக குடும்ப பாரத்துடன் என் படிப்பு வேறு. தலையைப்பிய்த்துக்கொண்டேன  என் மூத்த பெண் பத்மாவையும் அழைத்துச்செல்ல விடாமுயற்சி செய்தார் முடியவில்லை.என் அக்காவடம் விட்டுச்சென்றேன். முன் செய்த புண்ணியம் பின் வந்து காக்கும் என்பார்கள்.அது போல் நான் என் அண்ணா பையனைபடிக்க வைத்துக்கொண்டேன். என்பெண்ணைபடிக்கஅக்காவைத்துக்கொண்டுவிட்டாள். இருப்பினும் அவளை அழைத்துச்செல்லவில்லையே என்ற துக்கம் எனக்கு. US செல்லும்பொழுது நான் அழுதுகொண்டேதான் சென்றேன் கெட்டிக்காரப்பெண், என் அக்காவின் பெரிய குடும்பத்தில் பக்குவமாய் நடந்து கொண்டு
  நல்ல பெயர் எடுத்து, படிப்பில் நல்ல மதிப்பெண்களும் பெற்றாள்.


             
               மூன்று குழந்தைகள் , வயது 13, 11, 8 , என் வளர்ப்பா அல்லது நான் செய்த புண்ணியமா,
தெரியாது. சொன்னால் சொன்னபடி கேட்ப்பார்கள். (இன்றும் அப்படித்தான்ஆகையால். எனக்கு
தொல்லையில்லை.) நான் ரயிலிலேயே தனியாய் போனது கிடையாது. மூன்று குழந்தைகள்
6பெட்டிகள் ( US சமான்கள்)  என்று மும்பைக்கு, தனியாய் சென்றேன். அங்கு ஸ்டேஷனுக்கு
என் அண்ணா வந்து அழைத்துப்போனார்.மும்பயைப்பார்த்து மலைத்துத்தான் போனேன்
அடுக்குமாடிக்கட்டிடங்களும், அடுக்கடுக்காய் அலைகளும், ஆஹா என அதிசயமாய் இருந்தது.
என் அண்ணாவோ இது என்ன, நீ Newyork கே பார்க்கப்போகிறாய் ,என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
அதற்கு எனக்கு அதன் அர்த்தம் தெரியவில்ல 1963ல் மிகமிக சிலரே USசென்றார்கள்.


       
      என் அண்ணா, தன் மனைவியின் உறவினர் வீட்டிற்கு, என்னையும் குழந்தைகளையும் அழைத்துச்சென்றார்.  அவர் Air Indiaவில் Ground engineear. .அவரிடம் planeல் என்னன்னகிடைக்கும், என்னன்ன இருக்கும் என்ற டிப்ஸ் கேட்டுக்கொண்டோம். ஆக எல்லா ஏற்பாடுகளும்
ஆயிற்று. என் மன்னி மூவரும் என்னை தனியாய் அனுப்புகிறோமே என அழ, என் அண்ணா, தன் நண்பர் சர்மா என்பவரிடம் லண்டனில் plane மாத்த ஏற்பாடு செய்திருப்பதாய்  சொல்ல,அவரின் நம்பரைக்  கொடுத்தார். தவிர எங்கள் plane ல் ப்ரயாணம் செய்யும் ஒரு மராட்டிக்காரரை எனக்கு  உதவுமாறு கேட்டுக்கொண்டார். அவர் பெயர் மஜும்தார்.ஆக  நாங்கள் plane ஏறினோம்
    Planeல் உடல் வியர்த்து பின் குளிரில் நடுங்காரம்பித்தது. நாங்கள் இதுவரை AC  Roomஐ  கூடப்பார்த்ததில்லை. இனி plane 
ஏறிவிட்டோம் எதுவந்தாலும் எதிர்கொள்ளவேண்டும். பின் வாங்கமுடியாதே என்ற பயம். சரி என்று எங்கள் இருக்கையில் அமர்ந்தோம். ஒரு சாரியில் மூன்று seat ம் முன்  வரிசையில் ஒன்றும் எங்களுக்கு. நானும், பாலாஜியும், உஷாவும், ஒரு வரிசையிலும், 
முன் வரிசையில் ரவியும் உடகார்நதோம். அபொழுதெல்லாம் நகைகளை customsஸில் கொடுத்து ,seal செய்து, Air hostes டம்
கொடுப்பார்கள். அவர்கள்தான் நம்மிடம் plane புறப்பட்டதும்நம்மிடம் கொடுப்பது  வழக்கம். அப்படி என் வைரத்தோடு, வைரமூக்குத்தி, வைத்த sealed boxயை  Airhostes என்னிடம் கொடுக்க, அதைத்திறந்தபோது என் மூக்குத்தி கீழேவிழ, உடனே
என் பிள்ளை ரவி,மேல்பட்டனை அமுக்கி  Airhostes ஐ கூப்பிட்டுவிட்டான். அவளும் உடனே ஆஜராக, அவளிடம், என்ன பேசுவது?
ஒத்திகை பார்க்காமல் ஆங்கிலத்தில் என்னால் பேசமுடியாதே? நான் திணற, அதற்குள் ரவியே,அதை தேடி  எடுக்க, அதைப்பார்த்த
Airhostes தன்னிடத்துக்குத்திரும்பினாள்!


                பின் பிளேன் புறப்பட்டது. அவள் கையை , தலையை ஆட்டி தன் கடமையை முடித்த பின் சில மணி நேரத்தில், இரு
பெண்மணிகள் மயில் நடையில் ஒரு டிரேயல், Croissaint, Frenchfrys, ketchup Icecream, Fruits அத்துடன் gift ஆக,ஒரு
Tea box, one box of cigarets and Chocolate bar!!! அப்புழுது மனிதர்களை அப்படி வரவேற்தாரகள்!,! Croissant ஐ இதற்குமுன் பார்த்ததில்லை, அது மீன் போல் செதில்களுடன் காணப்பட்டத்தால்  அதை ஒதிக்கிவிட்டோம், தமிழ் நாட்டில் அந்தக்காலத்தல்
Ketchup  கிடையாது, ஆக அது , ஆட்டுரத்தமோ என அதையும் ஒதுக்கி, ice cream and fruits சாப்பிட்டோம். ரவி எங்கள் எல்லோருடைய  சிகரட்டையும் தன் பக்கத்திலுள்ள அமெரிக்க தம்பதிகளுக்கு கொடுத்தான். அவர்கள் மகிழ்ந்துபோனார்கள்.
அந்த சமயோசிதம் ரவிக்குத்தான் வரும்.( இப்பொழுதும் அவன் குணம் அப்படித்தான்)

                          பாலாஜி பாத்ரூம் செல்லவேண்டுமென்றதால் அவனை  அழைத்துக்கொண்டு சென்றேன். Airhostes பாத்ரூம் கதவுத்திறந்துவிட்டாள் , நான் உள்ளே சென்று கதவை மூடயதும்,  ஒரே வெளிச்சம், பகலவன் ப்ரத்யக்ஷ்க்ஷம் ஆனமாதிரி,
எனக்குத்தூக்கிவாரிப்போட, பாலாஜி என்னைக்கட்டிக்கொள்ள, ஒருவழியாய் சமாளித்தேன். பின் fleshoutஐ எப்படி operate
செய்வது?  நான் இதுவரை பார்த்தது Indian closet தான், western commode பார்த்ததில்லை , திரும்ப ஓரு தயக்கம், பின் 
ஒருவழியாய் switch அமுத்த, அது காட்டெருமைபோல கத்த, திரும்ப எங்களுக்கு ஒரு சோதனை!! ஒருவழி.ஆய் பாத்ரூமைவிட்டு
 வெளியே வந்தோம்.
(தொடரும்)