Sunday 7 February 2016

மேதை என் கிட்டு அண்ணா

               நாங்கள் என் தாய் தந்தையருக்கு 9 பது பேர்கள். என் ஐந்தாவது அண்ணா பெயர் கிட்டு.
படு சுட்டியது இருப்பார்கள். என் நாலாவது அண்ணாவுக்காக என் அப்பா ஒருவரிடம் தன் பிள்ளைக்கு வேலை வாங்கித்தர வேண்டுமென க்கேட்டு, அவரையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்கு
வந்தார்.என் நாலாவது அண்ணாவோட interview பண்ண.என் நாலாவது அண்ணாவோ அந்த வேலைக்குப்போகமுடியாது என்று சொல்ல,என் அப்பா என் அம்மாவிடத்தில் கத்த,அம்மா என்ன செய்வதறியாமல் கதிகலங்கிய நின்ற சமயத்தில் இந்த ஐந்தாவது  அண்ணா ( S S L C  , யில் Selection ஆகாமல் இருந்த இந்த கதாநாயகர்). நான் அந்த வேலைக்குப்போகிறேன் என்றாராம்!!!
வளர்த்தியிலும் peuniy யாய் இருப்பாராம்.எப்படி இவனை அனுப்புவது என என் அம்மா தயங்க,
என அப்பா வந்தவர் interview பண்ணட்டும் பின் பார்க்கலாம் என்றாராம். அந்த interview ல்
கிட்டு அண்ணா டாண் டாண் என அளித்த பதிலில்  வந்தவர் மிக்க மகிழ்ச்சி அடைந்து என் கிட்டு அண்ணாவின் முதுகில் தட்டிக்கொடுத்து ,வேலைக்குச்சேர்த்துக்கொண்டாராம். இதை என் அம்மா அடிக்கடிஎங்களிடம் சொல்லிப்பெருமை படுவாள்.

               கிட்டு அண்ணாவுக்கு தன் தம்பி ,தங்கைகள் மேல் பாசமும், பரிவும் அதிகம். தனக்கு என
ஒன்றும் வைத்துக்கொள்ளமாட்டார். அந்த சின்ன வயதில் தான் வாங்கும் சொற்ப சம்பளத்தில்
எங்களுக்குத்துணி மணி , அம்மாவுக்குப்புடவை என வாங்கி வருவார். நாங்கள் ஆவலுடன் அவர் வரவை எதிர்பார்ப்பதுண்டு.சில சமயம் side business செய்து, அதில் வரும் சொற்பதொகைலயில்
என் அக்காவையும், அவள் குழந்தைகளையும்,அழைத்து வந்து எங்களுடன் இர்ப்பார்.side busyness
என்பது, கடையில் ஜமக்காளம் வாங்கி விற்பதில்லை வரும் comition தான்!!!
இப்பொழுது நினைத்துக்கொள்கிறேன் அவர் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டுமெனஇதைஎழுதும்போது என் கண்களை கண்ணீர் மறைகிறது.

        Whttp://www.houzz.com/photos/39140304/Baxton-Studio-Prescott-Modern-Table-and-Stool-Set-with-Hidden-Storage-transitiosetshttp://www.houzz.com/photos/39140304/Baxton-Studio-Prescott-Modern-Table-and-Stool-Set-with-Hidden-Storage-transitional-coffee-tsetshttp://www.houzz.com/photos/39140304/Baxton-Studio-Prescott-Modern-Table-and-Stool-Set-with-Hidden-Storage-transitional-coffee-table-sets


                 இப்படி கொஞ்சமாய் முன்னுக்கு வந்து, பின், குண்டூர் (ஆந்திரா) சென்று புகையிலை
வியாபாரம் செய்தார்.அதில் நல்ல லாபம் கண்டு, செல்வச்செழிப்பாய் இருந்தார்.ஆஹா எவ்வளவு செல்வாக்கு அவருக்கு ! !எல்லோரும் அவரை( கிருஷ்ண மூர்த்தி காரு) என வரை ஒரு தெலுங்கனாகவே மதிப்பார்கள். அவருக்கு நான்கு குழந்தைகள் பிறந்து அதில் ஒன்று இறந்து,
வியாபாரத்திலும், நஷ்டம், ஏற்பட்டு, கங்காபூருக்கு வேலைக்குச்சென்றார், அப்பொழுது,
தன் தங்கையுடம், ஒரு பிள்ளையை படிப்புக்காக விட்டுச்சென்றார். என்னதான் தன் தங்கையுடன் விட்டாலும்,பிள்ளையின் பிரிவு எப்படி இருந்திருக்கும் என இப்பொழுது நினைத்துப்பார்க்கிறேன
(அதுவும் தாய்க்க) ஏனோக்கு அங்கிருந்து டில்லிக்கு வந்தார்.கழந்தை குட்டிகளுடன்,ஊர் விட்டு
ஊர் வருவது என்பது சுலபமல்ல. நான் எழுத்தில் வெடிப்பதிர்வு சுலபம். நடை முறையில்?
இவ்வளவுக்கு ஈடுபட்ட கொடுத்து, அவர் என்ன Graduate மல்ல. தானே ஒரு வேலையைத்தே(Royal en reeled) தன் விடா முயற்சியால், முன்னுக்கு வந்து  கோலோச்சினார். அப்படியே இருக்க கடவுள்.
விடவில்லை, ஆரம்பத்திலேயே காலுக்கு இரு குழந்தைகளைப்பரிகொடுத்தவர், பின்
வளர்ந்த பிள்ளையை உலகுக்குக்கொடுக்க நேர்ந்தது. ஆம் அந்தப்பிள்ளை தான் சன்யாசியாகி,
உலகுக்கு, நன்மை செய்யப்போவதாய், எழுதி வைத்துவிட்டு, போய்விட்டான். அவன் ஒரு MBBS
பட்டதாரி!!!  கடலில் எறிந்தாலும் என்னால் எழுந்திருக்க முடியும் என நிரூபித்தவர் என் அண்ணா .
வேலையில் உயர்த்தவும் எட்டி, கார்  டிரைவர், ஆள் படை என ராஜா மாதிரி இருந்தார்.
தன் தகப்பனாரையும் தன்னிடம் கொண்டு வைத்துக்கொண்டு, தேவைப்பட்டவர்களுக்கு,
தன் முயற்சியில் வேலை வாங்கிக்கொடுத்து, பல , பல, குடும்பங்களுக்கு, வீட்டில் அடுப்புகள், விளக்கும் எரியச்செய்தவர என அண்ணா . பின் தன் குழந்தைகள் ப்படிக்க வைத்து, வேலையில் அமர்த்தி, அவரவர் தன்னிடங்களுக்குச்சென்றபின், தன் ஓய்வுகாலத்தை, ஒரு அருமையான, flare ல்
நிம்மதியாக இருந்தார்.
                  அதே ஊரில்  உற்றார் உறவினர், இருக்க, அவர்களை, அடிக்கடி, சந்திப்பதிலும், விருந்தோம்பல், செய்வதிலும், தன் கடசிகாலத்த, நிம்மதியாக்க்கழித்து, தான் வந்த, வேலை முடிந்த, திருப்தியில் 89வது வயதில், நிறந்தர, ஓய்வுபெற்றார. இதுதான் , என் மேதை, கிட்டு அண்ணா.


       


            

No comments:

Post a Comment