Saturday 29 August 2015

.காசியப்பா store.

 அக்கா, திருச்சியில் காசியப்பா store  க்கு வந்தாள் அப்போது, காவேரி நீர் கணக்கில்லாமல் வரும்
(பிற்காலத்தில் குடம் கணக்குப்பண்ணி தண்ணீர் எடுத்த நாளும் உண்டு) அக்காவுக்கு டவுன் வாழ்க்கை  பக்கத்தாமெல்லாம் friends  அடுத்தாத்து ஜானகி மாமி, பக்கத்தாத்து மணி மாமி,
மில்லாத்து மாமியார், எதிர் வீட்டு ராஜாம்மாமி  என அக்காவுக்கு ஏக friends . அக்காவின்
இளமை வயது வேறு,கையில் தங்க வளையலுடன் பல கலர் கண்ணாடி வளையலகளும்
கையில் மினுமினுக்க,நிறுத்தி வைத்த மாதிரி மடிசார் கட்டும் தலையில் பிச்சோடாவும் மூக்கிலும்,
காதிலும் வைரம் மின்ன ,அக்கா மதுரை மீனாக்ஷஈ மாதிரி இருப்பாள்

                    மதியத்தில் மீனாக்ஷஈ யானாலும் 8மணிக்கு ஆபீஸ் செல்ல சாப்பிட உட்காருவார்
அத்திம்பேர், 7.30 மணிக்கு அரைக்கீரை வாங்கி வருவார்,அதைப்பார்த்து அக்கா,பல்லைக்கடிப்பதைப்பார்த்து அந்த நரசிம்ம ஸ்வாமியே ஆச்சர்யப்படுவார்அப்படிக்கடிப்பாள்
( அக்காவிக்கல்லவாதெரியும் அரைகீரையை ஆய்ந்து சமைக்க ஏற்படும் கஷ்ட்டம்?)
 ஒரு வழியாய் அத்திம்பேர் சாப்பிட்டு , ஏலம் கிராம்பு வாயில் அடக்கிக்கொண்டு, வேஷ்டி நுனியை, கையில் பிடித்துக்கொண்டு, ஓட்டமும் நடையுமாய் ரயிலைப்பிடிக்க ஓடுவார்
( அவர் கஷ்ட்டம் அவருக்கு).


              அக்காவின் ஒவ்வொரு பிரஸவத்தின் போதும், என் அத்திம்பேர் சமையலுக்கு. மாமி
போடுவது வழக்கம். சுய ஜாதியாய் ( திருச்சிப்பக்கம் சொந்த ஊராய் ்இருந்தால் சிலாய்க்யம்)
கால்களில் வீக்கம் இல்லாமல் ( என் அத்திம்பேருக்கு யானைக்கால் என்றால் ரொம்ப பயம்)
சிரித்த முகமாய்  குறைந்த சம்பளத்தில் தேடுவார் . கிடைப்பது என்னமோ அரிதுதான், அதனால்
எல்லா நண்பர்களிடமும் சொல்லிவைத்திருப்பார்,   மாதம் ஓடிக்கொண்டிருக்கும் ஆனால்
மாமி கிடைக்கமாட்டாள் .  என் அம்மாவும் ,அக்காவும் அவஸ்த்தை படுவார்கள். மாமி கிடைத்தால்தான் என் அம்மா ஊர் திரும்ப முடியும். மாமி. தேடும் படலம் உச்சத்தில் இருக்கும்
இரண்டு மாத appointment க்குமூன்று மாத தேடல் !!!!

அக்காவின் அடுத்த ப்ரஸவத்ற்கு அத்திம்பேர் மூன்றாவது மாதமே சமயல்கார மாமி தேட
அது 6 மாத்த்தில் கிடைக்க , என் அம்மா reliving  cook கிடைத்துவிட்டாள் என சந்தோஷப்பட,
அம்மா ஊருக்குப்போனாலும் சமயலுக்கு மாமியார் இருக்கிறாள் என அக்கா அகமகிழ,
அத்தனையும் கண்களை விட்டு அகலாகாக்ஷஈகள்

         அக்கா உறவினர் யாராவது வந்தால் தக்க ஸன்மானம் செய்தி அஅனுப்புவதில் வல்லவள்
தன் பதியின் பொருளாதாரம் அப்பொழுது அக்காவுக்கு மறந்து விடும். கடையில் அடுத்த மாதம்
கொடுத்துவிடலாம் என,ரவிக்கைத்துணி வாங்கி உறவினரை உற்சாகப்படுத்தி அனுப்பி விடுவாள்
அடுத்த மாதம் அத்திம்பேர் கத்தோகத்து.  கத்த  அக்கா அதை சமாளிக்க, அது அக்காவைத்தவிர. வேறு
யாராலும் முடியாது.

    அனால்  அக்கா சாமர்த்தியம் யாருக்கும் வராது!! வந்த விருந்தினருக்கு செய்து போட்டு
எப்படித்தான் சமாளித்தாளோ?  இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை ,ஆனால் உள்ளிருப்பவர்களுக்குத்தான் தெரியும் இல்லை என்று!!       (தொடரும்)    

                                     

No comments:

Post a Comment