நான் 12 வயது வரை Froke. ம்Bop cut மாகத்தான் இருந்தேன். என் அப்பாவின் நண்பர்களும், கூட வேலைபார்பவர்களும்,
அயல்நாட்டுக்கர்ர்களாய் இருந்ததால் அவர்களைப்போல எங்களுக்கும் Bread, Butter, Jam என Breakfast கிடைக்கும்.
அப்பொழுது Bread கேள்விப்படாத காலம். நான் கடைக்குட்டி என்பதாலும், 7 பிள்ளைகளுக்கு மத்தியில் நானும் என் அக்காவுமதான் பெண் என்பதாலும் , எனக்கு frocke Frock தான் போட்டார்கள். ஆக, Bop cutம் Froke மாக 12 வயதுவரை இரு.ந்த எனக்கு, 13வது வயதில்தான்
பாவாடை. தாவணி போட்டுக்கொண்டேன். என் 15வது வயதில் கல்யாணம் . என் கணவரின் படிப்பு முடிப்பதற்காக நான் என் பிறந்த வீட்டில்
இருந்த சமயம் ,1 வருடம் சித்தாடை என்னும் 6 கஜ ப்புடவை கட்டிக்கொண்டேன் . பின் என் கணவருடன் குடும்பம் நடத்தச்சென்றபோது
அப்பொழுதுதான் எனக்கு ஒரு பெரிய அதிர்ச்சி! “ நாளை முதல் மடிசார் கட்டிக்கொள்ளவேண்டும் என என் புகுந்த வீட்டு மனிதர்கள் சொல்ல,
நான் என்ன செய்வேன் . எனக்கு இருப்பதோ 4 கல்யாண ப்பட்டுப்புடவை. நான் எதைக்கட்டிக்கொள்வது.? நல்ஊல வேளையாக ூ ருக்குள் இருந்த என் அம்மாவும், அக்காவும், என்னைப்பார்க்க வந்தார்கள். அப்போது என அம்மாவிடம் விஷயத்தைச்சொன்னேன். அம்மா எனக்கு வாங்கித்தரும் நிலையில் இல்லை. என்று சொல்ல, பின் அக்கா தன்னஇடமுள்ள பணத்துடன், கடனும்வாங்கி மூன்று புடவை வாங்கினார்.ஒன்று என் அம்மாவுக்கு, ஒன்று எனக்கு , மற்றொன்று தனக்கு என்று வைத்துக்கொண்டாள். அதில் நான் ஒரு நாள் நூலபுடவையும், மறு நாள் பட்டுப்புடவையுமாய கட்டிக்கொள்வேன். பட்டுப்புடவை கட்டிக்கொள்ளும் நாட்களில், என்னைப்பார்ப்பவர்கள் பெரியடத்துப்பெண் என்று எண்ணலாம், ஆனால் மிகமக சாதாரணப்புடவையில்?
இப்படி பல மாதங்கள் சென்றபின் என் கணவர் சுமாரான விலையில் இரண்டு நூல்.புடவை வாங்கிக்கொடுத்தார்.
பிற்பாடு வருடத்தில் எனக்கு இரண்டு புடவை உண்டு.! இப்படி 18 முழப்புடவையில் 10 வருடம் கஷ்டப்பட்டேன் மதியமோ, இரவோ படுத்து எழுந்தால்
புடவை அவிழ்ந்துவிடும், அதை கட்ட அரை மணி நேரம் ஒதுக்கவேண்டும், பாத்ரூம் செல்வதோ கேட்கவேவேண்டாம் படு கஷ்டம் .
பின் என் மாமனார் காலமான பின் ( அப்பொழுது என் கடைசி குழந்தையை சுமந்துகொண்டிருந்தேன்) இவரிடம், கெஞ்சி, கூத்தாட,
அழுது, அடம்பிடித்து. 6 கஜம் புடவை கட்டிக்கொள்ள அனுமதி வாங்கினேன். அப்பொழுதும் இவர் உன்னிடம் இருக்கும் 9 கஜம் புடவையை யே 6 கஜமாக காட்டிக்கொள்என்றுவிட்டார். அப்பா. “ சாமி வரங்கொடுத்ததே”. என, மகிழ்ந்து, சம்மதித்தேன். நானோ மிக மிக ஒல்லியாக இருப்புபேன்புடவையோ 9 கஜம் , நானோ 10 வருட இடைவெளிக்குப்பின் 6 கஜம் கட்டிக்கொள்ளப்போகிறேன், ஈஸ்வர என்றழைத்தேன் பின் ஈஸ்வரன் ஆண்மகன் என,ஈஸ்வரியை த்யானம் செய்து, பிரும்மப்பிரயத்தினப்பட்டு, பத்து சுத்து சுத்தி, அதற்குள் புகுந்துகொண்டேன்!! மறு நாள் என் சிநேகிதி சிங்காரம்என்பவள் எனக்கு உதவினாள்.அப்படி 2 வருடம் ஓடியது, பின் இவர் 6 கஜம் புடவை வாங்கித்தர ஆரம்பித்தார்.
அப்படி 8 வருடம் ஓடியபின், US சென்றேன் . அங்கு சில Nylon saree வாங்கினேன். (. அனுமதி வாங்கினேன். , வாங்கிக்கொடுத்தார்,
வாங்கினேன், இதிலிருந்தே காலம் மாரியது) தெரியும். அங்கு 3 வருடம் குடித்தனம் செய்தபின் பிலானி , ராஜஸ்தான் வந்தோம், அங்கு
பல மாகாணமக்கள் உடை உணவு மொழி வித்யாசம் என்று எங்களை மாற்றத்தான் செய்தது. அங்கு 23 வருட வாழ்க்கை. பின் என் கணவர்
வேலை ஓய்வு பெற்று, சென்னை வந்தோம். தினமும் walk செல்வது வழக்கம் அப்படி ஒரு நாள் செல்லும்போது, கல் இடறி, புடவையும் தடுக்க,
நான் கீழே விழுந்து கை, கால் என எல்லா இடமும் பதம் பார்க்க, பின் என் குழந்தைகள் ஸல்வார் கமீஸ் போடவேண்டும் என வற்புறுத்த
நானும் சம்மதித்தேன். அப்பொழுது என் வயது 56! பின் US செல்லும்போது குளிருக்கு ஸல்வார் கமீஸ் குளிர் தாங்காது என Pant T shirtக்கு
மாறினேன், அப்பொழுது என் வயது 60 து
என் 75 வது வயதில் Shoping செல்லப்புறப்பட்டால் என் கணவர் ஸல்வார் கமீஸ் போட்டுக்கொள், புடவையின் நடப்பது கஷ்டம்
என்கிறார்!!! என்னத்தைச்சொல்ல, காலம் மாறிப்போச்சு !!!
No comments:
Post a Comment