Tuesday 8 March 2016

6. சிறுவயதுமுதல் வாழ்க்கையின் விளிம்புவரை - பக்கம் 6

அன்று TMS வீட்டில் சாப்பிட்டுவிட்டு, எங்கள் flat க்கு வந்தோம். அவர் வீட்டில் தமிழ் சாப்பாடு சாப்பிட்டதில் குழந்தைகளுக்கு ப்ரம் த்ருப்தி. குழந்தைகள் ,அப்பாவைப்பார்த்த சந்தோஷத்திலும்
வந்த களைப்பிலும் நன்றாய் தூங்கினார்கள். நானும் VK யும் விடிய, விடிய பேசிக்கொண்டிருந்தோம். ( பிரிந்தவர், கூடினால் பேசவும் வேண்டுமா) என்பது போல் நான் தனிமையில் பட்ட கஷ்டங்கள், தனியாய் பம்பாய்க்கு குழந்தைகளுடன் ரயிலிலும், பின் US க்கு
Plane னிலும் வரும் போது எனக்கு ஏற்பட்ட பயமும், அதில் ஏற்பட்ட அனுபவங்களும், எல்லாம் நான் சொல்ல, பின் VK , தான்  US ல் காலடி எடுத்து வைத்ததும் ஏற்பட்ட கலாசாரங்களின் அதிற்சியும்,பணத்துக்குப்பட்ட பாடும் , வீடு தேடும் படலம் , சமைத்துச்சாப்பிடும் கஷ்டம். இவைகளையெல்லாம்
என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

           காலையில் கதவு தட்டும் சத்தம் கேட்டு , கதவைத்திறந்தேன். ஆறு அடி உயரத்தில்அரைக்கால்சட்டை அணிந்த ஒருவரும், அவருடன் கூட, அவர் மனைவியும், கையில் பெரிய,அட்டைப்பெட்டியுடன் நின்றுகொண்டிருந்தார்கள்.அவர்களை எப்படி அழைப்பது என அறியாமல்,
பாதி வார்த்தயிலும், மீதி செய்கையில்மாய் அவர்களை வறவேற்தேன். உடனே VK எழுந்து வந்து,Hello, Mr & Mrs  Day என்று அவரை  வரவேற்றார். பின் தான் கொண்டு வந்திருந்த crockery s,pans, pots,Coffee perculeter, , plates,cups & saucers etc. அடங்கிய பெட்டியைஎங்களிடம்கொடுத்தார்கள். பின்  எங்களிடம் விடைபெற்றுகிளம்ம்பினார்கள்.
                     
                    VK  மறு நாள் எங்கள் எல்லோரையும் TMS காரில் shopping அழைத்துப்போனார்.குடும்பத்துக்கு வேண்டிய சாமான்களும், குழந்தைகளுக்கு வேண்டிய துணிமணிகளும் வாங்கினார்.ஆனால் இந்தியாவிலிருந்து வந்த நான் டாலரிலிருந்து, ரூபாயாக்கி, விலை என்ன என்று பார்ப்பேன். எனக்கு தூக்கிவாரப்போடும், ஐய்ய்யோ இவ்வளவு விலையாகுமா, என எடுப்பதும் வேண்டாம் என வைப்பதும அதுஇல்லாமல் குடுத்தனம் செய்ய இயலாது, என வாங்குவதுமாய்   இருந்தது.

                அடுத்த கட்டம் குழந்தைகளை ஸ்கூலில் சேர்ப்பது, குழந்தைகள் கெட்டிக்காரக்குழந்தைகளாக இருந்ததால் ஸ்கூலில் சேர்ப்பது எளிதாய் இருந்தது.ஆனால் அவர்களைக்கொண்டுவிட, கார் வேண்டுமே? VKயின் நண்பர் மூலம், ஒரு secondeCar  வாங்கினோம். அதற்கு லைஸன்ஸ் வாங்க முதல்தரம் சென்று கிடைக்கவில்லை.இரண்டாவதுதடவை சென்றார் அப்பொழுதும் அவர் பாஸ் ஆகவில்லை. மூணாவது தடவையும்
Failஆனல் பின் மூன்றுமாதத்துக்கு  லைஸன்ஸ் வாங்க  முடியாது. என்ன செய்வது என கலக்கம்பின் ஆண்டவனை நம்பி அடுத்த. Test க்குச்சென்றார். கடவுள் ்கை விடவில்லை!!!அன்று VK லைஸன்ஸ் டன் வீட்டுக்கு வந்ததும் எங்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி,சொல்லிலடங்கா
இனி குழந்தைகளை ஸ்கூலில் கொண்டுவிட, shopping சென்றுவர,இன்னொருவர் உதவியை நாடவேண்டாம் என்ற நிம்மதி.நாம்கஷ்டப்படும்போதுதான்  அதன் அருமை தெரியும்.


                        அடுத்த கட்டம் குழந்தைகளுக்கு ஒரு tuition masterதேடவேண்டும்,திரும்பவுமVKயின் நண்பர் மூலம்  ஏற்பாடாயிற்று. Mrs. Cade  என்பவள்.நாளை 5 மணிக்கு , குழந்தைகளுக்கு, பாடம் சொல்லிக்கொடுக்க, ஏற்பாடு செய்து விட்டு, காலேஜ் சென்றார் . மாலை ஐந்து மணி இருக்கும், ஆறு அடி உயரமும், அரை அடிக்கொண்டையும், அரை அடி high heels மாக, ஒரு பெண்மணி  ஒய்யாரமாய் நடந்து வந்தாள்.
வந்ததும், மூன்று குழந்தைகளுக்கும் மூன்று dicshenery வாங்குங்கள் என்றும், மறு நாள் ஐந்துமணிக்கு வருவதாகும், சொல்லிச்சென்றாள்.

                  இரண்டு நாள் கழித்து, காலேஜிலிருந்து இவர் phone பண்ணினார், நம் வீட்டு வழியாய் ஒரு பஸ் வரம் என்றும், , அதில் 
25 cent கொடுத்து ஏறினால், காலேஜில் இறங்கிக்கொள்ளலாம் என சொன்னார்.மனதில் தயக்கம் இருந்தாலும், தைர்யத்தை
வரவழைத்துக்கொண்டு,  குழந்தைகளை சம்த்தாய் வீட்டில் இருக்கச்சொல்லிவிட்டு, நான் பஸ் ஏறினேன். இவர் எனக்கு 25 நிமிடத்தில் வந்து சேருவாய் என்று சொல்லியிருந்தார். ஆனால் 45 நிமிடம் ஆகியும், காலேஜ்  வரவில்லை, ஆனால் பஸ் பல இடங்களில் நின்று, என் வீட்டுப்பக்கமே வந்து,நின்றது. நான் driver டம் சென்று, நான் university செல்லவேண்டும், அது இன்னும் 
வரவேயில்லையே.? என்றேன். ( இவ்வளவும் திக்கித்திணறி ஆங்கிலத்தில் கேட்பதற்குள், என் உயிரே பொய்விட்டது)
அங்கு பஸ்ஸில் கண்டெக்டர் கிடையாது. எல்லாவற்றுக்கும் driverதான்.  அதற்கு அவர் காலேஜ் போய்விட்டது என்றாரே
பார்க்கணும்.எனக்கு தூக்கிவாரிப்போட்டது. பின் நான் என்ன செய்ய, என்று பதறிப்போய்கேட்டேன். கவலைப்படாதே இந்த பஸ் சுற்றிக்கொண்டேயிருக்கும், காலேஜ்வரும்பொழுது சொல்கிறேன் இறங்கிக்கொள் என்றார். அப்பாடா என்று காலேஜ் வந்ததும்
இறங்கனேன். 

                     அது ஒரு காலேஜா, ஒரு ஊர் மாதிரி  பல மாடிக்கட்டிடங்களுடன் காட்சி அளித்தது. இவ்வளவு பெரிய இடத்தில்,
இவர்  departmentஐ கண்டுபிடித்து, அதில் இவர் roomஐ கண்டுபிடிப்பது என்பது, நடக்குமா என் எண்ணி இவரை மனதால் திட்டிக்கொண்டிருக்கும் சமயம், Hi,are you
Mrs. Krishnamurthy. ? என்றார் ஒரு 6 அடி உயரமும், அரைக்கால்சட்டையுமாக, ஆமாம் என்பதற்கு அடையாளமாய் தலையை ஆட்டினேன். பயத்தில் yes சொல்ல வாய் வரவில்லை. You want to go to your husbands room ? என்றார் yes yes என்றேன். 

அனுமன் வந்து சீதையை காப்பாத்தியமாதிரி இருந்தது. அவர் என் கையை பிடித்துக்குலுக்கி you are welcome என்றார்.
அப்பொழுது என் தேகம் பூமி வெடித்து  உள்ளே போவது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது. என் அப்பா அண்ணாக்கள் தவிர
என்னைத்தொட்டவர்கள் கிடையாது.அப்படி இருக்க அதிர்ந்துநின்றேன. பின் வேறு வழியில்லாமல் அவரை பின் தொடர
அவர் Dr Krishnamurthy என்று பலகை மாட்டிய அறையில் கொண்டுவிட்டார்.நான் எனக்கு ஏற்பட்ட அதிற்சியை VK யிடம்,
சொல்ல, அதற்கு இவர், இதெல்லாம் ஒருgood, experience என்றும், இங்கு கை குலுக்குவது சர்வ சாதாரணம்,இதற்கெல்லாம்
நீ அதிரக்கூடாது, நீ ஒரு அமெரிக்க யுனிவர்ஸிட்டியில் ஒரு professor ன் மனைவி என்று என்னை சமாதானப்படுத்தனார்.
இதெல்லாம் 1963ல் நடந்தது, இப்பொழுது இங்கேயே சர்வசாதாரணம். 






   குழந்தைகள் வெகு சீக்கிரம் இங்கிலீஷ் பேசவும் , படிக்கவும் கற்றுக்கொண்டு, நிறைய friendsம்பண்ணிக்கொண்டார்கள். நாங்கள் இருந்த குடியிருப்பு, post graugevat students குடியிருப்பு.ஆகையால் யாவரும் காலேஜ் students. பல தேசத்து மனிதர்கள் இருந்தார்கள். ஆதலால் என்
English ஒன்றும் மோசமாய் இல்லை. இருப்பினும் கடைகளில் சாமான்வாங்க திணறித்தான் போனேன். வீட்டில் வந்து, gramerஐப்பார்த்து, படித்துப்பழகி,வீட்டு வேலையும் படிப்புமாக இருந்தேன். ஆனால் தப்போ தவறோ, பேசி , சமாளித்து வெளிவரும் சாமர்த்தியம்எனக்கு இருந்தது.

                ஆக நாட்கள் ஓடின, எனக்கும் பல தேசத்துfriendsம் American friends, கிடைத்தார்கள்.
இதற்கிடையில் என் பையன்கள் paper boy ஆனார்கள் .paper boy என்பது தினமும், பேப்பர்
போடுவதுதான் ,ஆனால் அதை பள்ளிபையன்கள்தான் போடுவது வழக்கம். அதில் வந்து saccess
ஆனால் தனி பெருமையும்,அதில் நிறைய, custermers ஐச்சேர்த்தவர்களுக்கு, பரசுகள்,
வழங்கப்படும். அதில் என் முதல் பையன் ரவியும், இரண்டாவது பையன் பாலாஜியும் ஆளுக்கொரு
சைக்கிள் பெற்றார்கள். பின் ரவி, ஒருcontestல் Newyork world fair க்குஅழைத்துச்செல்லப்பட்டான்
அடுத்த மாதம் பாலாஜி Rose bowl என்னும் baseball என்னும் விளையாட்டு அரங்கத்திற்கு
அழைத்துச்செல்லப்பட்டான். இவைகளெல்லாம் இவர்களுக்கு, ஒரு  rech experience ஆக இருந்தது.








No comments:

Post a Comment