Tuesday 8 March 2016

7. சிறு வயது முதல் வாழ்க்கையின் விளிம்புவரை பக்கம் 7

   சென்ற blogல் என் பையன்கள் paper boy க இருந்த தைப்பற்றிச்சொன்னேன், இரண்டு வருட முடிவில். அவர்களைப்பற்றி News paper ல் போடுவதற்காக, interview பண்ண, வந்தார்கள். அவர்கள் paperboyயாகஇருந்து சேர்த்த பணத்தை
என்ன செய்யப்போகிறார்கள் என்று கேட்டார்கள்.  பாலாஜி,
தன் மேல்படிப்புக்காக உபயோகிப்போம் என்றான், ரவி ஊரிலிருக்கும், தன் அக்காவின் கல்யாணத்துக்கு உதவுவோம் என்றான். அது பேப்பரில் வந்து பிரபலமாய் பேசப்பட்டது. இப்படி நாட்கள் ஓடின, இந்தியாவில் விட்டு வந்த பெண்ணை நினைத்து வருந்துவதும், திரும்ப இந்தியா சென்றால் எங்கு வேலைக்குச்செல்வது என்ற, கவலையும், எங்களைத்தொத்தத்தொடங்கியது. இதற்கிடையில் எங்களுக்கு visa problem  வந்து, அதை,
Mr. Mrs Cade மூலம் ஒரு Senate Member ஆல் அதை தீர்த்துவைக்கப்பட்டது                 ( Mr and Mrs Cade பிற்காலத்தில் அவர்கள் எங்கள் குடும்பத்தில்ஒருவறானார்கள். ))

         மூன்றாவது ஆண்டு முடிவில் VK  க்கு, இந்தியாவிலிருந்து, மூன்று offers வந்தது. ஒன்று கரக்பூர் I I T யிலிருந்து., மற்றொன்று, பிலானியலிருந்து. அப்புழுது பிலானி, சாதாரணகாலேஜாக,இருந்தது. MR . GD Birla  and MIT யும் சேர்ந்து,  அதை MIT மாதிரி ஆக்கத்தீர்மானித்து, சில  expreince of American univercity prof. களை வைத்து, அந்தக்காலேஜை மாற்றி அமைக்க தீர்மானித்தார்கள். அதில் முதலாவதாக அழைக்கப்பட்ட ஆசிரியர் VK. இதற்காக அவர் MITஇல் இண்டர்வியூ செய்யப்பட்டார்.  ஆக, குடும்பத்துடன் Ford Foundation செலவில் இந்தியாவிலுள்ள,பிலானிக்கு வந்தோம். முதல் நாள் NewYork.மறு நாள் பாலைவன பிலானி!! என் அண்ணா டில்லியில் இருந்ததால்,  டில்லியிலேயே, எல்லாசாமானும் , வாங்கிக்கொண்டு, பிலானி வந்தோம். அப்பொழுது உள்ள பிலானி இப்பொழுது உள்ளது போல் அல்ல. ஒட்டகத்தைத்தவிர ஒன்றும் கிடையாது.

         திரும்ப, குழந்தைகளை எங்கு சேர்ப்பது? ஹிந்தியும்,  தெரியாது என குழப்பம். .எங்களுக்குத்தான் குழம்புவதும், தெளிவும் கை வந்த கலையாயிற்றே!!! பிர்லாவினால்,ஏற்படுத்தப்பட்ட, மிக, உயர்ந்த, இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல். School fees ம் உயர்ந்தது தான்!!
ஆனால் horse riding, swimming, என பல  வித கலைகளும் உண்டு.
பெரி ய பெண் பத்மாவை  நாங்கள் இங்கு வருமுன்னேயே இங்கு சேர்க்க ஏற்பாடு செய்திருந்தார் VK. கடிதம் மூலம் காரியத்தை முடிப்பதில் மன்னன். சென்னையில் உள்ள பெண்ணை, பிலானி காலேஜில் சேர்த்து, அந்த காலேஜ் பிரின்ஸ்பாலை, gardian ஆக, இருக்கச்சொல்லி, என் அக்காமாப்பிள்ளையை விட்டு, பிலானியில் கொண்டுவிடச்சொல்லி, அவளை மூன்று மாதம் ஹாஸ்டலில் இருக்கச்செய்தார்.இதை எழு தற எனக்கு மூச்சுமுட்டுகிறதே இவ்வளவையும் எழுத்தில் வடித்து எண்ணத்தை சாதித்த என் கணவருக்கு எத்தனை சபாஷ் போட்டாலும் தகும் !!
  இதில் எது வேண்டுமானாலும் தப்பாய் முடியலாம் . இதை இவர் சாமர்த்தியம் என்று சொல்வதா?  இல்லை, எங்கள் மூதாதையர் கள் ஆசீ என்று சொல்வதா ? இல்லை எல்லாம் வல்ல, அந்த ஈசன் செயல் என்று சொல்வதா? அந்த ஈசனுக்குத்தான் தெரியும்!!!!


  (தொடரும்)        


No comments:

Post a Comment