Wednesday 16 March 2016

9. .சிறு வயது முதல், வாழ்க்கையின் விளிம்புவரை. பக்கம் 9

                     நாங்கள் இருவரும் வயது 70 தைத்தாண்டினோம் என் குழந்தைகள் ஒரு மனதாக,
தனிமையில் சென்னையில் இருக்கக்கூடாது எனவும், எங்களிடம் வந்து விடுங்கள், எனவும்
சொன்னார்கள். நாங்கள் எங்களுக்குத்தெம்பு இருக்குமட்டும், இருவரும் குடித்தனம் செய்கிறோம் என்றதால், அவர்கள் அப்படியானால் ஏதாவது, குழந்தைகள் பக்கத்தில்தான் இருக்க வேண்டுமென்றே அன்புக்கட்டளை, போட்டதால், நாங்களும் சென்னை வீட்டை விற்று, விட்டு
பெங்களூரில் Flat வாங்கிக்கொண்டு, என் கடைசி பெண் உஷா பக்கத்திலேயே, குடி வந்தோம்.
அடிக்கடி US செல்வதும், குழந்தைகளின், பொருளாதார வளர்ச்சியையும், குடும்ப, வளர்ச்சியையும்,
பார்த்து மகழ்வோம். வாழ்க்கைச்சக்கரம் மேடுபள்ளமில்லாமல் இருக்குமா? அது மகாபாரத்த்திலேயே இல்லையே!!

           என் கணவருக்கு 82 வயதில் By pass sergery பண்ண வேண்டுமென, நிலை ஏற்பட, என்
குழந்தைகள், ஒருவர் மாற்றி ஒருவர் வந்து உதவி பணத்தையும் வாரியிரைத்து, வைத்யம் செய்ய, என் 78 வது வயதில் இவைகளை சமாளிக்க, திணறித்தான் போனேன்.  யாருக்கு இந்த மாதிரி குழந்தைகள் கிடைக்குமென,மனது, எண்ணி, தெம்பையும் கொடுத்தது. 15 வயதில் மாட்டிக்கொண்ட பந்தம், த72 வயதிலுள்ள விடவில்லை , என எதிர் நீச்சல் போட்டேன். அதிலிருந்து மீண்டு வந்து , சிலபேரன், பேத்தி, கல்யாணங்களைக் கண்டு களித்தோம். எங்கள், 8 பேரன் , பேத்திகளும்,5 கொள்ளுப்பேரன், பேத்திகளும், மட்டில்லா மகிழ்ச்சியில், திணற அடித்தார்கள்.
நிழலின் அருமை, வெயிலில், போனால்தான் தெரியும் என்பதுபோல்,  என் கணவருக்கு, எப்போதும் போல் Master checkup  செய்ய, அதில் எல்லா Reselt ம், exalend, Exalend
என்று , வர  Psa மட்டும் எண்ணிக்கையில் அதிகம் காட்ட,  biopsy எடுத்தோம்
   biopsy எடுக்கச்சுன்னார்கள், என்று சொன்னேனல்லவா, எடுத்ததில், prostaet cancer
ஆரம்ப நிலையில் இருப்பது தெரிந்தது. நிலை குலைந்துபோனோம். Prostaet cancer Docter
எங்கள் complex லேயே, வசித்து வந்ததால் சீக்கிரத்தில் opaintment கிடைத்தது.
என் பேத்தியும், அவள் கணவரும் டாக்டர்கள். உலகத்தில் 80 பது பேர்களுக்கு, இருக்கிறது,அவரகளுக்குத்தெரிவதில்லை, என்றும், இந்த வயதில் வைத்தியம் வேண்டாம்
என்றும், சொன்னார்கள்.
              இங்குள்ள  டாக்டர், treatment செய்து கொள்வதும் வேண்டாம் என்பதும் உங்கள் இஷ்டம்.
செய்து கொண்டால் இதைப்பற்றி கவலைப்பட தேவை இல்லை, உங்கள் உடம்பு தாங்குமா?
பணச்செலவு முடியுமா? உதவிக்கு மனிதர்கள் இருக்கிறார்களா? எல்லாவற்றையும், யோஜனைசெய்து பின் வாருங்கள் என்றார்.உடனே நான் அவரை ஒரு கேள்வி கேட்டேன்.
உங்கள் அப்பாவோ அல்லது, மாமனாரோவாக, வோ இருந்தால் நீங்கள் என்ன முடிவெடுப்பீர்கள்?
என்று கேட்டேன். அதற்கு அவர், VKயின், உடல் நிலை ஆரோக்யமாய் உள்ளது என்றும்,
அவருக்கு vill power ம் இருக்கிறது என்றும், இந்த treatment ஐ தாங்குவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது, என்றும், இதை மேற்கொண்டால்தான் நல்லது என்பதால்  இந்த மாதிரி உடல்நிலை இருந்தால் கட்டாயம் என் உறவினராய் இருந்தால் Treatment பண்ணுவேன் என்றார். பின் வீட்டிற்கு வந்தோம்.
                இரவில் குழந்தைகள் நால்வரிடமும் பேசினோம். நால்வரும் ஏகமனதாய், பணத்தைப்பற்றியோ, மனித உதவியைப்பற்றியோ, துளிக்கூட யோஜிக்க வேண்டாம், நாங்கள் நால்வரும் தலையைக்கொடுப்போம், வைத்யமுறையில், உங்களுக்கு இருக்கும், அசௌகர்யம் பற்றி மட்டும், நீங்கள் உங்கள் விருப்பத்தைச்சொன்னால் போதும் என்றார்கள்.  கடவுளே, அடுத்த, ஜன்மம்
என்று இருப்பின், இந்தக்குழந்தைகளையே கொடு, என கண்ணீர் மல்கினேன்.அப்பாவின்
விருப்பத்திற்கு விட்டு விடுங்கள். என்றும், அதில் என் மூத்த பிள்ளை, அப்பாவின் முடிவ
சரியோ, தப்போ , எதுவானாலும், யாரும் அவரைக்குற்றம் சொல்லக்கூடாது. என்றான்.
த்த்துவமான , வார்த்தையை எவ்வளவு அழகாய் சொல்லியுள்ளான் என்  பிள்ளை!!!
( தொடரும்)

No comments:

Post a Comment